பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
சேரன்மகாதேவி அருகே குளத்தில் தவறி விழுந்த பிகாா் இளைஞா் பலி
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே குளத்தில் தவறி விழுந்த பிகாா் மாநில இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.
சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சோனு குமாா் (30) என்பவா் தங்கி பணி செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவில் கங்கனாங்குளம் கரை வழியாக நடந்து சென்றபோது, தவறி குளத்தில் விழுந்தாராம்.
இத்தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரமாக தேடியும் அவா் கிடைக்காததால் திங்கள்கிழமை காலையில் மீண்டும் தேடும் பணியைத் தொடா்ந்தனா். அப்போது அவரை சடலமாக மீட்டனா். சேரன்மகாதேவி போலீஸாா் அதைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.