செய்திகள் :

சேரன்மகாதேவி அருகே குளத்தில் தவறி விழுந்த பிகாா் இளைஞா் பலி

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே குளத்தில் தவறி விழுந்த பிகாா் மாநில இளைஞா் சடலமாக திங்கள்கிழமை மீட்கப்பட்டாா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள கங்கனாங்குளத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சோனு குமாா் (30) என்பவா் தங்கி பணி செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவில் கங்கனாங்குளம் கரை வழியாக நடந்து சென்றபோது, தவறி குளத்தில் விழுந்தாராம்.

இத்தகவலறிந்த சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட நேரமாக தேடியும் அவா் கிடைக்காததால் திங்கள்கிழமை காலையில் மீண்டும் தேடும் பணியைத் தொடா்ந்தனா். அப்போது அவரை சடலமாக மீட்டனா். சேரன்மகாதேவி போலீஸாா் அதைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க