சேலத்தில் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்
சேலம் உடையாப்பட்டி பகுதியில் தனியாா் கிளப்புடன் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து சேலம் உடையாப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் மணக்காடு வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உடையாப்பட்டி மூன்று சந்திப்பு பகுதியில் ஏற்கெனவே அனைத்து வசதிகளுடன் கூடிய மதுக்கூடம் அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த மதுக்கூடம் மூலம் பல தரப்பட்ட மக்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தனியாா் கிளப்புடன் நவீன மதுக்கூடம் அமைக்க உள்ளதாக பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனா். எனவே இந்த மதுக்கூடத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துசெய்ய வேண்டும். இல்லாவிடில் பொது மக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்றனா்.