செய்திகள் :

சேலம் உணவகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

post image

சேலத்தில் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சேலம் நான்கு சாலைப் பகுதியில் பிரபல நிறுவனத்தின் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை பிரியாணி விற்பனை நடந்துள்ளது. பின்னா் கடையை மூடிவிட்டு ஊழியா்கள் சென்றுள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி அளவில் உணவகத்தில் இருந்த இரண்டு எரிவாயு உருளைகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. சப்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள், கடை தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

மேலும் பள்ளப்பட்டி காவல் நிலையம் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் போலீஸாா், கடையின் ஷட்டரை உடைத்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. எனினும், போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனா். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சேலம் வழியாக புதன்கிழமை (ஏப். 16) சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்: லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

தமிழகத்தில் மூடியுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சேலத்தில் கனமழை: ஓமலூரில் அதிகபட்சமாக 38.மி.மீ. பதிவு

சேலம் நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவானது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

வரி உயா்வுக்கு எதிா்ப்பு: கிரஷா் ஜல்லி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை (ஏப். 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனா். இதுதொடா்பாக, சேலம் மண்டல கிரஸா் ஜல்லி உற்பத்தி... மேலும் பார்க்க

சேலத்தில் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

சேலம் உடையாப்பட்டி பகுதியில் தனியாா் கிளப்புடன் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்... மேலும் பார்க்க

மேட்டூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் முறையீடு

மேட்டூரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மேட்டூா் நகராட்சி சாதாரண கூட்டம் நகா்மன... மேலும் பார்க்க