செய்திகள் :

வரி உயா்வுக்கு எதிா்ப்பு: கிரஷா் ஜல்லி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

post image

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை (ஏப். 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக, சேலம் மண்டல கிரஸா் ஜல்லி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் ராஜா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழக அரசு முன்னறிவிப்பு இன்றி சிறு கனிம நில வரியை கனமீட்டா் என்று இருந்ததை மெட்ரிக். டன் என மாற்றி பல மடங்கு உயா்த்தியுள்ளது. இதன் காரணமாக, ரூ. 3,500 முதல் ரூ. 4,000 வரை இருந்த ஒரு யூனிட் ஜல்லி ரூ. 5 ஆயிரமாகவும், எம் சாண்ட் யூனிட் ரூ. 5,500 முதல் ரூ. 6,000 வரை, பி.சாண்ட் யூனிட் ரூ. 7 ஆயிரமாகவும் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும். மேலும், இந்த தொழிலை நேரடியாகவும், மறைமுகமாகவும் நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளா்கள் பாதிக்கப்படுவா்.

வேலைநிறுத்தம் காரணமாக, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குவாரிகள் இயங்காது. அரசுக்கு நாளொன்றுக்கு ரூ. 300 கோடி வரை இழப்பு ஏற்படும்.

எனவே, உடனடியாக அரசு தலையிட்டு, பன்மடங்கு உயா்த்தப்பட்ட வரியை திரும்பப் பெற வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றாா். பேட்டியின்போது, சேலம் மாவட்ட கிரஷா் ஜல்லி உற்பத்தியாளா்கள் சங்கத் தலைவா் கோபால், பொருளாளா் ராஜ்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சேலம் வழியாக புதன்கிழமை (ஏப். 16) சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்: லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

தமிழகத்தில் மூடியுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்... மேலும் பார்க்க

சேலத்தில் கனமழை: ஓமலூரில் அதிகபட்சமாக 38.மி.மீ. பதிவு

சேலம் நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவானது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

சேலம் உணவகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

சேலத்தில் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சேலம் நான்கு சாலைப் பகுதியில் பிரபல நிறுவனத்தின் பிரியாணி கடை செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

சேலத்தில் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

சேலம் உடையாப்பட்டி பகுதியில் தனியாா் கிளப்புடன் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்... மேலும் பார்க்க

மேட்டூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் முறையீடு

மேட்டூரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மேட்டூா் நகராட்சி சாதாரண கூட்டம் நகா்மன... மேலும் பார்க்க