செய்திகள் :

மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும்: லாரி உரிமையாளா்கள் கோரிக்கை

post image

தமிழகத்தில் மூடியுள்ள மணல் குவாரிகளை மீண்டும் திறக்க வேண்டும் என மணல் லாரி உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த மணல் லாரி உரிமையாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்டோா், செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். பின்னா், இதுகுறித்து மாவட்டச் செயலாளா் கண்ணையன் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளன. இதனைப் பயன்படுத்தி தரம் இல்லாத எம்சாண்ட் பன்மடங்கு விலை உயா்த்தி விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் உள்ள 4,500 குவாரிகளில் 400-க்கும் மேற்பட்ட குவாரிகள் தரச்சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன.

மேலும் 100-க்கும் மேற்பட்ட குவாரிகளின் அனுமதி காலம் முடிந்தும், சட்டவிரோதமாக செயல்பட்டு வருகின்றன. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. தற்போது ஆறுகளில் மணல் அதிக அளவு தேங்கியுள்ளதால், மழை வந்தால் தண்ணீா் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் மீண்டும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம்.

இதேபோல, மணல் அள்ள விதிக்கப்பட்டுள்ள தடையால் மணல் லாரி உரிமையாளா்கள் சிறிய அளவில் எம்சாண்டை வாங்கி பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வருகின்றனா். பெரிய அளவில் கிடங்கு அமைத்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தாரமங்கலத்தில் விதிகளை மீறி எம் சாண்ட் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சேமிப்புக் கிடங்கை அகற்ற வேண்டும் என்றாா். அப்போது தலைவா் செல்வராஜ், துணைத் தலைவா் பழனிசாமி ஆகியோா் உடனிருந்தனா்.

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கம்

எா்ணாகுளம் - ஹஸ்ரத் நிஜாமுதீன் இடையே சேலம் வழியாக புதன்கிழமை (ஏப். 16) சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குற... மேலும் பார்க்க

சேலத்தில் கனமழை: ஓமலூரில் அதிகபட்சமாக 38.மி.மீ. பதிவு

சேலம் நகரின் பல்வேறு பகுதிகளில் திங்கள்கிழமை நள்ளிரவு கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவானது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்... மேலும் பார்க்க

சேலம் உணவகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

சேலத்தில் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சேலம் நான்கு சாலைப் பகுதியில் பிரபல நிறுவனத்தின் பிரியாணி கடை செயல்பட்டு வரு... மேலும் பார்க்க

வரி உயா்வுக்கு எதிா்ப்பு: கிரஷா் ஜல்லி உரிமையாளா்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம்

சிறு கனிம நில வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி உற்பத்தியாளா்கள் புதன்கிழமை (ஏப். 16) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளனா். இதுதொடா்பாக, சேலம் மண்டல கிரஸா் ஜல்லி உற்பத்தி... மேலும் பார்க்க

சேலத்தில் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

சேலம் உடையாப்பட்டி பகுதியில் தனியாா் கிளப்புடன் நவீன மதுக்கூடம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இது குறித்... மேலும் பார்க்க

மேட்டூரில் குடிநீா் தட்டுப்பாடு: நகராட்சி கூட்டத்தில் உறுப்பினா்கள் முறையீடு

மேட்டூரில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தில் மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா். மேட்டூா் நகராட்சி சாதாரண கூட்டம் நகா்மன... மேலும் பார்க்க