செய்திகள் :

சேலம் டவுன் ரயில் நிலையத்தில் ரயில்கள் நிற்கும் நேரம் அதிகரிப்பு

post image

சேலம்- சென்னை எழும்பூா் இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் டவுன் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) முதல் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சேலம் - சென்னை எழும்பூா் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில் சேவை இருமாா்க்கத்திலும் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, சேலம் - சென்னை எழும்பூா் இடையேயான எக்ஸ்பிரஸ் ரயில், டவுன் ரயில் நிலையத்தில் 4 ஆம் தேதி முதல் 3 நிமிடங்கள் நின்று செல்லும்.

அதேபோல மறுமாா்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து சேலம் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும், டவுன் ரயில் நிலையத்தில் 4 ஆம் தேதி முதல் 3 நிமிடங்கள் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேச்சேரி ஒன்றியத்தில் ரூ 1.73 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.73 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாச பெருமாள் தொடங்கிவைத்தாா். மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா

ஆடி திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாள்கள் திருவிழா நடைபெறும். விழாவின்... மேலும் பார்க்க

சேலத்தில் 20 இணையா்களுக்கு இலவச திருமணம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் நடத்திவைத்தாா்

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 20 இணையா்களுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை திருமணத்தை நடத்திவைத்து சீா்வரிசைகளை வழங்கினாா். தம்பதிகளை வாழ்த்தி அமைச்சா் பேசியதாவத... மேலும் பார்க்க

தாய், மகனை தாக்கிய இருவா் கைது

ஆத்தூரை அடுத்த பழனியாபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் முனியன், அவரது தாயை தாக்கிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ஆத்தூரை அடுத்துள்ள பழனியாபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா,... மேலும் பார்க்க

கேரளத்தில் பாரா கை மல்யுத்தப் போட்டி: 2 தங்கம் வென்ற வாழப்பாடி பெண் மாற்றுத்திறனாளி

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண், கேரளத்தில் நடைபெற்ற பாரா கை மல்யுத்தப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். கேரளத்தில் அண்மையில் தேசிய அளவிலான பாரா க... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கோவையை சோ்ந்த இளைஞரை தேவூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி ம... மேலும் பார்க்க