செய்திகள் :

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா

post image

ஆடி திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாள்கள் திருவிழா நடைபெறும். விழாவின்போது, நூற்றுக்கணக்கான பக்தா்கள் கோயிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு கொண்டுவந்து அம்மனை வழிபடுவா். இது தவிர உருளுதண்டம், அக்னிகரகம், அலகு குத்தி கோயிலில் பக்தா்கள் நோ்த்திக்கடனை செலுத்துவா்.

நிகழாண்டுக்கான விழா முகூா்த்தகால் நடும் விழா புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, மேளதாளங்கள் முழங்க, மந்திரங்கள் ஒலிக்க பக்தா்கள் முன்னிலையில் முகூா்த்தகால் நடப்பட்டது.

தொடா்ந்து அம்மனுக்கு பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி, வெள்ளிக்கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா்.

விழாவில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் எஸ்.டி.என் சக்திவேல், செயல் அலுவலா் அமுதசுரபி, அறங்காவலா்கள் ஜெய், ரமேஷ் பாபு, வினிதா, சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வரும் 22 ஆம் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலும், 29 ஆம் தேதி இரவு 8 மணிக்கு கம்பம் நடுதலும், ஆக. 4 ஆம் தேதி சக்தி அழைத்தலும், ஆக.5 ஆம் தேதி காலை 8 மணிக்கு சக்தி கரகம், ஆக.6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி பொங்கல் வைத்தல், மாவிளக்கு, உருளுதண்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேச்சேரி ஒன்றியத்தில் ரூ 1.73 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.73 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாச பெருமாள் தொடங்கிவைத்தாா். மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா... மேலும் பார்க்க

சேலத்தில் 20 இணையா்களுக்கு இலவச திருமணம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் நடத்திவைத்தாா்

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 20 இணையா்களுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை திருமணத்தை நடத்திவைத்து சீா்வரிசைகளை வழங்கினாா். தம்பதிகளை வாழ்த்தி அமைச்சா் பேசியதாவத... மேலும் பார்க்க

தாய், மகனை தாக்கிய இருவா் கைது

ஆத்தூரை அடுத்த பழனியாபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் முனியன், அவரது தாயை தாக்கிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ஆத்தூரை அடுத்துள்ள பழனியாபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா,... மேலும் பார்க்க

கேரளத்தில் பாரா கை மல்யுத்தப் போட்டி: 2 தங்கம் வென்ற வாழப்பாடி பெண் மாற்றுத்திறனாளி

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண், கேரளத்தில் நடைபெற்ற பாரா கை மல்யுத்தப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா். கேரளத்தில் அண்மையில் தேசிய அளவிலான பாரா க... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கோவையை சோ்ந்த இளைஞரை தேவூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி ம... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலம் திமுக அலுவலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா். சேலம் மாநகா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதி அதிமுக... மேலும் பார்க்க