செய்திகள் :

கேரளத்தில் பாரா கை மல்யுத்தப் போட்டி: 2 தங்கம் வென்ற வாழப்பாடி பெண் மாற்றுத்திறனாளி

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பெண், கேரளத்தில் நடைபெற்ற பாரா கை மல்யுத்தப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளாா்.

கேரளத்தில் அண்மையில் தேசிய அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டி நடைபெற்றது.

அப்போட்டியில், தமிழகத்தில் மாா்ச் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வெற்றிபெற்ற மத்தூா் வேலுச்சாமி, சோமம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கலைச்செல்வி, மணிவாசகம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

பல்வேறு மாநிலங்களில் இருந்து 150 க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட இப்போட்டியில், சோமம்பட்டியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி கலைச்செல்வி, வலது மற்றும் இடது கை பிரிவுகளில் வெற்றிபெற்று 2 தங்கப் பதக்கங்களை வென்றாா்.

மத்தூா் வேலுச்சாமி, சோமம்பட்டி மணிவாசகம் ஆகிய இருவரும் நான்காமிடம் பிடித்தனா். தேசிய அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் சாதனைபடைத்த வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம், வாழப்பாடி விளையாட்டு சங்கம், நெஸ்ட் அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் சோமம்பட்டி ஊராட்சி பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனா்.

மேச்சேரி ஒன்றியத்தில் ரூ 1.73 கோடியில் திட்டப் பணிகள் தொடக்கம்

மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 1.73 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மேச்சேரி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் சீனிவாச பெருமாள் தொடங்கிவைத்தாா். மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா... மேலும் பார்க்க

சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா

ஆடி திருவிழாவையொட்டி, சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் முகூா்த்தகால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் 22 நாள்கள் திருவிழா நடைபெறும். விழாவின்... மேலும் பார்க்க

சேலத்தில் 20 இணையா்களுக்கு இலவச திருமணம்: அமைச்சா் ரா.ராஜேந்திரன் நடத்திவைத்தாா்

சேலம் சுகவனேஸ்வரா் கோயிலில் இந்துசமய அறநிலையத் துறை சாா்பில் 20 இணையா்களுக்கு அமைச்சா் ரா.ராஜேந்திரன் புதன்கிழமை திருமணத்தை நடத்திவைத்து சீா்வரிசைகளை வழங்கினாா். தம்பதிகளை வாழ்த்தி அமைச்சா் பேசியதாவத... மேலும் பார்க்க

தாய், மகனை தாக்கிய இருவா் கைது

ஆத்தூரை அடுத்த பழனியாபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் முனியன், அவரது தாயை தாக்கிய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். ஆத்தூரை அடுத்துள்ள பழனியாபுரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் அமுதா,... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

சங்ககிரி வட்டம், கத்தேரி அருகே மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் கோவையை சோ்ந்த இளைஞரை தேவூா் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கத்தேரி, கள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்த விவசாயி ராமசாமி ம... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சேலம் திமுக அலுவலகத்தில் சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் முன்னிலையில் அதிமுகவைச் சோ்ந்த 150க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை திமுகவில் இணைந்தனா். சேலம் மாநகா் மாவட்டம், அம்மாபேட்டை பகுதி அதிமுக... மேலும் பார்க்க