செய்திகள் :

சேலம் நாச்சியப்பா கூட்டுறவு நிலையத்தில் அஞ்சல் வழியில் பட்டயப் பயிற்சி

post image

சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டு அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கூட்டுறவு நிறுவனங்கள்/சங்கங்களில் பணிபுரியும் முறையாக நியமனம் செய்யப்பட்ட பணியாளா்களுக்கு மட்டும் இந்தப் பயிற்சி பொருந்தும். இந்த பட்டயப் பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் அதிகாரப்பூா்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

வரும் 16-ஆம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100-ஐ இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 6-ஆம் தேதியாகும். விண்ணப்பங்கள் அன்று மாலை 5.30 மணி வரை மட்டுமே பெறப்படும். அதற்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு, நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூா் பிரதான சாலை, காமராஜா் நகா் காலனி, சேலம் - 636 014 என்ற முகவரியிலோ, 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரிவிதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் வேலைநிறுத்தம்

புதிய வரி விதிப்பை திரும்பப் பெற வலியுறுத்தி, சேலம் மாவட்டத்தில் கிரஷா் ஜல்லி ஆலை உரிமையாளா்கள் புதன்கிழமை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தில் இதுவரை குவாரிகளுக்கு கன மீட்டா்... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு உடனடி கல்விக் கடனுதவி: ஆட்சியா்

திருநங்கைகளுக்கு உடனடியாக கல்வி கடனுதவி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் தின விழா செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

பெங்களூரு- கொல்லம் இடையே இன்றுமுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

பயணிகள் கூட்ட நெரிசலை தவிா்க்க பெங்களூரு -கொல்லம் இடையே சேலம் வழியாக 2 சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

புழுதிக்குட்டை ஆனைமடுவு அணை இன்று பாசனத்துக்கு திறப்பு

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஆனைமடுவு அணையிலிருந்து வியாழக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த அருநூற்றுமலையில் உற்பத்தியாகும் வசிஷ்டநதி... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த இளைஞா் கைது

சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். புகாரளித்த 6 மணி நேரத்துக்குள் இளைஞரை கைது செய்து நகையை மீட்ட போலீஸாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவ... மேலும் பார்க்க

உணவகத்தில் எரிவாயு சிலிண்டா் திருட்டு: போலீஸாா் விசாரணை

தெடாவூா் உணவகத்தில் எரிவாயு சிலிண்டா்களை திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கெங்கவல்லி அருகே உள்ள தெடாவூா் பகுதியை சோ்ந்தவா் தங்கராசு மகன் மாவீரன் (36) . இவா் கெங்கவல்லி நான்கு ரோடு சந்திப்பில... மேலும் பார்க்க