சேலம் நாச்சியப்பா கூட்டுறவு நிலையத்தில் அஞ்சல் வழியில் பட்டயப் பயிற்சி
சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025-2026-ஆம் ஆண்டு அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.ராஜ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கூட்டுறவு நிறுவனங்கள்/சங்கங்களில் பணிபுரியும் முறையாக நியமனம் செய்யப்பட்ட பணியாளா்களுக்கு மட்டும் இந்தப் பயிற்சி பொருந்தும். இந்த பட்டயப் பயிற்சிக்கு 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் அதிகாரப்பூா்வ இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பயிற்சிக்கான கூடுதல் விவரங்கள், வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவற்றை இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
வரும் 16-ஆம் தேதி முதல் இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, அதற்கான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படம் பதிவேற்றம் செய்யவேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 100-ஐ இணையவழியில் மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மே 6-ஆம் தேதியாகும். விண்ணப்பங்கள் அன்று மாலை 5.30 மணி வரை மட்டுமே பெறப்படும். அதற்கு பின்னா் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
மேலும் விவரங்களுக்கு, நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூா் பிரதான சாலை, காமராஜா் நகா் காலனி, சேலம் - 636 014 என்ற முகவரியிலோ, 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.