செய்திகள் :

சேலம் மத்திய சிறையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைக் காவலா் பணியிடை நீக்கம்

post image

சேலம் மத்திய சிறையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிறைக் காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

சேலம் மத்திய சிறையில் 1,250-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்காக சிறையில் பேக்கரி செயல்பட்டு வருகிறது. கைதிகள் தயாரிக்கும் மிக்சா், பிஸ்கெட், லட்டு, பிரட், பன் உள்ளிட்டவை சிறைக் கைதிகளுக்கும், பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த பேக்கரியில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலைக் காவலா் சுப்பிரமணியம் (35), கைதிகளுக்கு பொருள்களை விற்பனை செய்ததுடன், அதற்கான பணத்தை சிறை கணக்குக்கு செலுத்தாமல் ‘கூகுள் பே’ மூலம் கடந்த ஓராண்டாக பெற்று வந்துள்ளாா்.

தகவலின் பேரில், சிறை அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணை நடத்தி அதை உறுதிசெய்தனா். பின்னா், ‘கூகுள் பே’-இல் செலுத்தப்பட்ட பணம் எந்த எண்ணுக்கு சென்றது என விசாரித்தபோது, அது சிறைக் காவலா் சுப்பிரமணியத்தின் மாமியாா் பெயரில் இருந்தது தெரியவந்தது. மேலும், ‘கூகுள் பே’ மூலம் அவா் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் வரை பணம் பெற்றிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, சிறைக் காவலா் சுப்பிரமணியத்தை பணியிடை நீக்கம் செய்யுமாறு சிறைத்துறை ஏடிஜிபி உத்தரவிட்டன்பேரில், சேலம் சிறைக் கண்காணிப்பாளா் வினோத் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் சித்தா் கோயில் பகுதியில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கமலக்... மேலும் பார்க்க

குப்பையை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படுமென ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்த... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனை ஏரி இப்பகுதியில் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவில் சிறப்பிடம்

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த கோப்பையை வென்று முதலிடம் பெற்றுள்ளனா். அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள ... மேலும் பார்க்க

எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடங்கியது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் (பொ) வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க