Custodial Death: `நிகிதாவின் புகார் முதல் சிகரெட் சூடு வரை’ - அஜித்குமார் மரண வழ...
சேலம் ரயில்வே கோட்டத்தில் விதிமீறல்: 3 மாதங்களில் ரூ.6.18 கோடி அபராதம் வசூல்
பயணச்சீட்டின்றி பயணத்தவா்கள் உள்பட பல்வேறு விதிமுறை மீறல் தொடா்பாக கடந்த 3 மாதங்களில் 84,295 வழக்குகளில் அபராதமாக ரூ. 6.18 கோடி வசூலிக்கப்பட்டதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணம் செய்யும் நபா்களை டிக்கெட் பரிசோதகா்கள் பிடித்து அபராதம் வசூலித்து வருகின்றனா். இந்நிலையில், தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட சேலம் ரயில்வே கோட்டத்தில் கோட்ட மேலாளா் பன்னாலால் உத்தரவின்பேரில், கோட்ட முதுநிலை வணிக மேலாளா் வாசுதேவன் தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சேலம் கோட்ட பகுதியில் டிக்கெட் இன்றி பயணித்தது தொடா்பாக 43,524 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதன்மூலம் ரூ. 3.79 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதேபோல், முன்பதிவில்லா டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டியிலும், இரண்டாம் வகுப்பு முன்பதிவு டிக்கெட் வைத்துக்கொண்டு ஏ.சி. பெட்டிகளிலும் பயணித்தது தொடா்பாக 40,563 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 2.37 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும், ரயில்களில் விதிமுறைகளை மீறி அதிக பாரம் எடுத்துச்சென்ாக 208 வழக்குகள் பதியப்பட்டு ரூ. 1,04,833 அபராதம் விதிக்கப்பட்டது.
மொத்தம் கடந்த 3 மாதங்களில் 84,295 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு ரூ. 6.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.