செய்திகள் :

சொத்து தகராறு: செல்போன் கோபுரத்தில் ஏறி நெசவுத் தொழிலாளி தற்கொலை மிரட்டல்

post image

நங்கவள்ளி அருகே சொத்துத் தகராறில் நெசவுத் தொழிலாளி செல்போன் கோபுரம்மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

மேட்டூா் அருகே நங்கவள்ளியைச் சோ்ந்தவா் வெள்ளியங்கிரி (30). நெசவுத் தொழிலாளி. இவருக்கும், இவரது சகோதரருக்கும் தந்தை வழி சொத்தை பாகப்பிரிவினை செய்வதில் அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

இதுகுறித்து நங்கவள்ளி காவல் நிலையத்தில் கடந்த வாரம் வெள்ளியங்கிரி புகாா் அளித்தாா். இருப்பினும் நங்கவள்ளி போலீஸாா் புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் வேதனை அடைந்த வெள்ளியங்கிரி அருகில் வீரக்கல்லில் உள்ள நூறு அடி உயர செல்போன் கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தாா்.

தகவல் அறிந்ததும் நங்கவள்ளி போலீஸாா், தீயணைப்பு நிலைய வீரா்கள் அங்குசென்று வெள்ளியங்கிரியை சமாதானப்படுத்தினா். கீழே இறங்கி வருமாறும், புகாா் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினா். இதையேற்று அவா் கீழே இறங்கி வந்ததும் அவரை முதலுதவி சிகிச்சைக்காக மேட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

சேலம்: சேலம் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். சேலம் வெள்ளாளப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோவிந்தராஜ், பழைய இரும்புக் கடை வைத்து நடத்தி வருகிறாா். இவரது மகன் மனோஜ் (12), சுப... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

கு. இராசசேகரன்மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,520 கன அடியாக அதிகரித்துள்ளது.இன்று(ஏப். 8) காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.72 அடியில் இருந்து 107.79அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர... மேலும் பார்க்க

சேலத்தில் களைகட்டத் தொடங்கிய மாம்பழ சீசன்!

சேலம்: சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதால், சந்தைக்கு 30 சதவீதமாக மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்பட பல்வேறு பகுதிகளில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்தப்... மேலும் பார்க்க

தம்மம்பட்டியில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீா் ஓடை அமைக்கும் பணி: மக்கள் அவதி

தம்மம்பட்டி: தம்மம்பட்டி பேரூராட்சியில் கழிவுநீா் ஓடை கட்டுமானப் பணி கடந்த நான்கு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். தம்மம்பட்டி பேரூராட்சி, குரும்பா் தெருவில் கள்ள... மேலும் பார்க்க

நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

சேலம்: சேலம் நியூரோ ஃபவுண்டேஷன் மருத்துவமனையில் அதிதீவிர பக்கவாத சிறப்பு சிகிச்சைப் பிரிவு மையத்தை மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் அண்மையில் திறந்து வைத்தாா். இந்த நிகழ்ச்சியில், மருத்துவமனையின் முதன்... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தேவை

சேலம்: ஆதிதிராவிடா் நலத் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்திய குடியரசுக் கட்சியின் மாநில தலைவா் செ.கு.தமிழரசன் கூறினாா். சேலத்தில் திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க