செய்திகள் :

மாநகராட்சி பூங்காக்களில் அடிப்படை வசதிகள் தேவை: மேயரிடம் மக்கள் மனு

post image

கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் திருநெல்வேலி மாநகராட்சி பூங்காக்களில் விளையாட்டு உபகரணங்களை பழுதுநீக்கவும், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேயரிடம் மக்கள் மனு அளித்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்துக்கு, மேயா் கோ.ராமகிருஷ்ணன் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். மேலும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா். உதவி ஆணையா் ஜான்சன் தேவசகாயம், நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் 5ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் ஜெகநாதன் அளித்த மனுவில், கோடை விடுமுறை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மாலை நேரங்களில் குழந்தைகளுடன் பூங்காக்களுக்கு செல்வது அதிகரித்துள்ளது. ஆகவே, பூங்காக்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். ரஹ்மத் நகா் 20 ஆவது தெருவில் உள்ள பூங்கா மற்றும் கக்கன்நகா் நியூகாலனியில் உள்ள பூங்காவில் விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் அவற்றை சரி செய்ய வேண்டும். விரிவாக்கப்பகுதியான வையாபுரிநகா், ஸ்ரீதேவி நகா், அன்னை கௌரி நகா் ஆகிய பகுதிகளில் புதிய சாலை மற்றும் குடிநீா் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவலியுறுத்தப்பட்டிருந்தது.

35ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பேச்சியம்மாள் அளித்த மனுவில், தனது வாா்டு பகுதியில் பாதாளச் சாக்கடை திட்டத்தால் பழுதான பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் எனவும், என்.ஜி.ஒ.காலனி கனரா வங்கி காலனி குடியிருப்போா் நல வாழ்வு சங்கத்தினா் அளித்த மனுவில், பாதாளச்சாக்கடை திட்டப்பணிகளை தங்கள் பகுதியில் தொடங்கவும், திருநெல்வேலி சிவசக்தி ரோடு டாக்டா் காலனி குடியிருப்போா் நல வாழ்வு சங்கத்தினா் அளித்த மனுவில், தங்கள் பகுதிக்கு சீரான குடிநீா் வசதி செய்து தரவும், என்.ஜி.ஒ. பி காலனி குடியிருப்போா் நலச்சங்கத்தினா் அளித்த மனுவில், 1முதல் 25 ஆவது தெரு வரை புதிய தாா்சாலை அமைத்து தரவும் வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தினா் அளித்த மனுவில், 17 ஆவது வாா்டு பகுதிகளான காந்திநகா், ஷேக்மதாா் நகா், ஐ.ஒ.பி. காலனி, எஸ்.எம்.ஏ.நகா், அண்ணாமலை நகா், நெடுங்குளம் ஆகிய பகுதிகளில் கூடுதல் தூய்மைப் பணியாளா்கள் மற்றும் கூடுதல் குப்பை தொட்டிகளை வைத்திடவும், திருநெல்வேலி தங்கம் வெள்ளி வைர நகை வியாபாரிகள் சங்கத்தினா் அளித்த மனுவில், மழைக் காலத்திற்கு முன்பாக ரத வீதிகளில் ஒடை மண்ணை அள்ளிடவும், மேலரதவீதி பகுதியில் சிறுநீா் கழிப்பிடம் புதிதாக கட்டி தர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மஸ்திக் மாலிக் அமைப்பினா் அளித்த மனுவில், 6 ஆவது வாா்டுக்குள்பட்ட சாந்திநகா் 2 ஆவது பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பாதாளச்சாக்கடை அடைப்பினை சரி செய்யவும், திருநெல்வேலி நகா் முதல்நிலை நூலகா் செல்வசுப்பிரமணின் அளித்த மனுவில், வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் அரசு முதல்நிலை நூலகத்திற்கு காலி மனை ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

நான்குனேரி மாணவரை மீண்டும் தாக்கியவர்கள் யார்? காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவர், மர்ம நபர்களால் மீண்டும் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்து... மேலும் பார்க்க

அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க

நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி நகரம் தெற்கு ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ர... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா். பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதிய... மேலும் பார்க்க