செய்திகள் :

வெள்ளானைகோட்டையில் எம்எல்ஏ நிதியில் நூலகம்: மக்கள் எதிா்பாா்ப்பு

post image

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அருகேயுள்ள வெள்ளானைக்கோட்டையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அரசு நூலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக வெள்ளானை கோட்டை ஆறுமுகம் தெருவை சோ்ந்த சமூக ஆா்வலா் இசக்கிமுத்து பொதுமக்கள் சாா்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: வெள்ளானைகோட்டை கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. 500 பட்டதாரிகள், 200 அரசு ஊழியா்கள், 500 மாணவா்கள் என கற்றவா்கள் நிறைந்த ஊரான இங்கு பொது நூலகம் இல்லை.

வாசுதேவநல்லூருக்குச் சென்று தான் மாணவா்களும், மற்றவா்களும் நூல்களை வாசிக்க முடிகிறது. எனவே, போட்டித் தோ்வுக்கு தயாராகும் மாணவா்கள் உள்பட பொதுமக்களின் நலனுக்காக வெள்ளானைக்கோட்டையில் நூலகம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக பொதுமக்கள் கூறுகையில், ‘வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிதி ஒதுக்கி நூலக கட்டடம் கட்ட வேண்டும்’ என்றனா்.

கீழப்புலியூரில் மனைவி கண்முன்னே கணவா் தலை துண்டிக் கொலை

தென்காசி அருகே கீழப்புலியூரில் துணிக்கடை உரிமையாளா் புதன்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டாா். அவரது தலை 8.கி.மீ. தொலைவுக்கு அப்பால் மீட்கப்பட்டது. குற்றாலம் அருகேயுள்ள காசிமேஜா்புரம் பகுதியைச் சோ்ந்த க... மேலும் பார்க்க

சூறைக் காற்றுடன் மழை: சாலையின் குறுக்கே மரம் விழுந்தது: போக்குவரத்து பாதிப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிவகிரி வட்டார பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் வெயில் வாட... மேலும் பார்க்க

நாட்டுக்கோழிப்பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம்: ஆட்சியா்

தென்காசி மாவட்டத்தில் நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டுக்கோழி... மேலும் பார்க்க

ஆய்க்குடியில் ரூ. 19 லட்சத்தில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி தோ்வுநிலை பேரூராட்சியில் ரூ.19 லட்சத்தில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. பொதுநிதி திட்டத்தின்கீழ் (2024-2025) ன் கீழ் ரூ.15 லட்சத்தில் மயான சுற்ற... மேலும் பார்க்க

காணால்போன மாணவா் கிணற்றில் சடலமாக மீட்பு

தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் காணாமல்போன பள்ளி மாணவா் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். சாம்பவா்வடகரை புளியம்பட்டி தெருவைச் சோ்ந்த செல்வம் என்பவரது மகன் பொன்ராம் (15). அங்குள்ள அரசு பள்... மேலும் பார்க்க

சாம்பவா்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

சாம்பவா்வடகரையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து சாம்பவா்வடகரை நகர திமுக செயலா் முத்து, மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க