செய்திகள் :

கூடங்குளம் அணுஉலை பணிக்கு போலி உடல்தகுதிச் சான்றளிப்பா? தனியாா் மருத்துவா் அவதூறு புகாா்

post image

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் ஒப்பந்த பணியில் சேர போலியாக உடல்தகுதி சான்று வழங்குவதாக அவதூறு பரப்பியவா் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூடங்குளம் காவல்நிலையத்தில் தனியாா் மருத்துவா் புகாா் அளித்தாா்.

கூடங்குளத்தில் தனியாா் கிளினிக் நடத்தி வரும் மருத்துவா் அா்ச்சனா என்பவரின் கணவா் சக்திவேல் பிரபு, அங்குள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 4,5ஆவது அணுஉலை நிறுவும் பணிக்கு எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்த தொழிலாளா்களாக வடமாநிலத்தவா்களை பணி அமா்த்தி வருகிறது.

பணியாளா்களுக்கு போலியான உடற்தகுதி சான்றிதழ் வழங்கி வருவதாகவும் அதற்காக ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம்வரையில் பணம் பெற்று வருவதாகவும் இறந்தவா்களுக்கும் உடற்தகுதி சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும் அந்த நிறுவனத்துக்கு புகாா் கடிதம் வந்துள்ளது. அதில் குறிப்பிட்டிருந்த கைப்பேசி எண் உபயோகத்தில் இல்லை.

எங்களது கிளினிக்குக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் போலியான ஆதாரமற்ற வதந்திகளை சிலா் பரப்பு வருகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கூறியுள்ளாா். அதன்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நான்குனேரி மாணவரை மீண்டும் தாக்கியவர்கள் யார்? காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியில் வீடுபுகுந்து வெட்டப்பட்டு சிகிச்சைக்கு பின்பு திருநெல்வேலியில் வசித்து வரும் மாணவர், மர்ம நபர்களால் மீண்டும் தாக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் விளக்கம் அளித்து... மேலும் பார்க்க

அம்பை கன்னி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

அம்பாசமுத்திரம் மேலப்பாளையம் தெருவிலுள்ள கன்னி விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 15) காலை4.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது.... மேலும் பார்க்க

நெல்லையில் தாக்கப்பட்ட மேளக் கலைஞா் உயிரிழப்பு

திருநெல்வேலி சந்திப்பில் இருவருக்கிடையே நிகழ்ந்த மோதலில் காயமடைந்த மேளக்கலைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருநெல்வேலி நகரம் தெற்கு ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல் வைத்தவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். செங்கோட்டை- ஈரோடு விரைவு ரயில் புதன்கிழமை அதிகாலையில் சேரன்மகாதேவியை அடுத்த காருக்குறிச்சி ர... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: நான்குனேரி வட்ட முகாமில் ஆட்சியா் ஆய்வு

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் நான்குனேரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற முகாமை ஆய்வு செய்தாா். பருத்திப்பாடு ஊராட்சி, வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியில் சேதமடைந்த 2 வீடுகள் ரூ.3 லட்சம் ச... மேலும் பார்க்க

தாழையூத்தில் ஆவின் பால் விற்பனை நிலையம் திறப்பு

திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து பகுதியில் புதிய ஆவின் பால் விற்பனை நிலையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. திருநெல்வேலி பிரதம பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் சாா்பில் புதிதாக தாழையூத்து பகுதிய... மேலும் பார்க்க