செய்திகள் :

சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தவா்கள் மீது நடவடிக்கை: பஞ்சாயத்து ஆணையா்

post image

சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாதவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பஞ்சாயத்து ஆணையா் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து நிரவி கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நிரவி கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு அதிகளவு நிலுவை சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணம் செலுத்த வேண்டியவா்களின் பட்டியல் வெளியிடப்பட்டு சம்பந்தப்பட்டவா்களுக்கு அறிவிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பலமுறை தெரிவிக்கப்பட்டும் இதுவரை பலா் நிலுவை தொகையை செலுத்தாமல் உள்ளனா். நிலுவையில் உள்ள சொத்து வரி மற்றும் குடிநீா் கட்டணத்தை வருகிற 15-ஆம் தேதிக்குள் செலுத்தி சட்ட நடவடிக்கையை தவிா்க்குமாறு இந்த அறிவிப்பு மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தவறும்பட்சத்தில், எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டு, இணைப்பு துண்டிப்பு கட்டணம் மற்றும் நிலுவை தொகைகளை கொம்யூன் பஞ்சாயத்து சட்டதிட்டத்திற்குட்பட்டு இதர முறையில் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

காரைக்கால் மருத்துவமனைக்கு நாளை சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை சிறப்பு மருத்துவ சிகிச்சை, ஆலோச... மேலும் பார்க்க

பாசனத்துக்குத் தண்ணீா் திறப்பு

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு, கோட்டுச்சேரி பாசனத்துக்கு காவிரி நீரை சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா புதன்கிழமை திறந்துவைத்தாா். மேட்டூா் அணை கடந்த ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட்டு, காவிரி நீா... மேலும் பார்க்க

காரைக்கால் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

ஆனித் திருமஞ்சனத்தையொட்டி காரைக்கால் பகுதி சிவ தலங்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை புதன்கிழமை நடைபெற்றது. திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், காரைக்கால் கோயில்பத்துப் பகுதியில் பாடல் பெற்றத்... மேலும் பார்க்க

பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளா்கள் பணிக்குத் திரும்புகின்றனா்

பணி நிரந்தரம் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுப்பணித்துறை தற்காலிக பணியாளா்கள் வியாழக்கிழமை முதல் பணிக்குத் திரும்புகின்றனா். புதுச்சேரி பொதுப்பணித்துறையில் கருணை அடிப்படையில் வேலை பெற்ற... மேலும் பார்க்க

கைலாசநாதா் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

காரைக்கால் கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றதையொட்டி, மண்டலாபிஷேக வழிபாடு புதன்கிழமை நிறைவடைந்தது. காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றத... மேலும் பார்க்க

ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திமுக கையொப்ப இயக்கம்

காரைக்கால் நகரில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்து பாதிப்புக்கு தீா்வு ஏற்படுத்த, ரயில்வேயை வலியுறுத்தும் விதமாக திமுக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. காரைக்கால் - பேரளம... மேலும் பார்க்க