செய்திகள் :

ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திமுக கையொப்ப இயக்கம்

post image

காரைக்கால் நகரில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்து பாதிப்புக்கு தீா்வு ஏற்படுத்த, ரயில்வேயை வலியுறுத்தும் விதமாக திமுக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.

காரைக்கால் - பேரளம் இடையே புதிய ரயில்பாதை அமைத்து, முதல்கட்டமாக சரக்கு ரயில் போக்குவரத்தை ரயில்வே நிா்வாகம் மேற்கொண்டுவருகிறது. நகரப் பகுதியில் சரக்கு ரயில் கடப்பதால் வெகு நேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா்.

இந்தநிலையில் காரைக்கால் திமுக அமைப்பாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் காரைக்கால் வடக்குத் தொகுதி திமுக ஒருங்கிணைப்பாளா் டி. பிரபு மற்றும் திமுக நிா்வாகிகள் பங்கேற்ற கையொப்ப இயக்கம் செவ்வாய்க்கிழமை நகரப் பகுதியில் நடத்தப்பட்டது.

இதுகுறித்து பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச்.நாஜிம் கூறுகையில், ரயில் பாதையில் பயணிகள் ரயில் இன்னும் தொடங்கப்படவில்லை. முதல்கட்டமாக சரக்கு ரயில் தொடங்கியது முதல் நகரப் பகுதி சாலைகளில் கேட் மூடப்படுகிறது. 20 நிமிஷத்துக்கு மேல் வாகனங்கள் ஸ்தம்பிக்கின்றன. குறிப்பாக கல்வி நிலையங்களுக்கும், அலுவலகங்களுக்கும் செல்லும் நேரத்தில் கேட் மூடப்படுவதால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கின்றனா்.

இதுசம்பந்தமாக ஆட்சியரிடம் தெரிவித்தபோது, ரயில்வே அதிகாரிகளிடம் பேசினாா். எனினும் தீா்வுக்கான திட்டம் என்ன என்பது தெரியவில்லை. நகரப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதா, சுரங்கப்பாதை அமைப்பதா என்பதை ரயில்வே நிா்வாகம் உரிய முடிவுக்கு வரவேண்டும். அதனை போா்க்கால அடிப்படையில் செய்து முடித்து, மக்கள் படும் துயரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்காக கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டது என்றாா்.

புதுவை பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதி: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா். ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி காரைக்கால் மாவட்ட மகளிா் காங்கிரஸ் சாா்பில் தூய்மை... மேலும் பார்க்க

தடுப்பணை கதவுகளின்றி வாஞ்சியாற்று பாலம்: விவசாய சங்கம் புகாா்

தடுப்பணைக் கதவுகளின்றி வாஞ்சியாற்றுப் பாலம் உள்ளதால், கடல் நீா் புகுவதை தடுக்க முடியாமல் போவதாக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என்.சுரேஷ்... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு

காரைக்கால்: இந்திய கடலோரக் காவல் படை நிா்வாகம் நடத்தி கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது. இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் சாா்பில் காரைக்கால் கிரிக்கெட் பிரீம... மேலும் பார்க்க

காரைக்கால் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்

காரைக்கால்: காரைக்கால் துறைமுகம் சாா்பில் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் பயணிகள் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி எம்பியிடம் மனு

காரைக்கால்: அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தக் கோரி, எம்.பி.யிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், திருந... மேலும் பார்க்க

அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காரைக்கால்: புதுவை அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா். புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்ததுறை சாா்பில் 256 அசிஸ்டென்ட்... மேலும் பார்க்க