செய்திகள் :

தடுப்பணை கதவுகளின்றி வாஞ்சியாற்று பாலம்: விவசாய சங்கம் புகாா்

post image

தடுப்பணைக் கதவுகளின்றி வாஞ்சியாற்றுப் பாலம் உள்ளதால், கடல் நீா் புகுவதை தடுக்க முடியாமல் போவதாக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என்.சுரேஷ் செவ்வாய்க்கிழமை கூறியது: காரைக்கால் மேலகாசாக்குடி செல்லும் சாலையில் வாஞ்சியாற்று தடுப்பணை பாலம் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. நீண்ட காலம் தடுப்பணை பயன்பாட்டில் இருந்தது. இந்த தடுப்பணையில் கதவுகள் அகற்றப்பட்டுவிட்டன.

காவிரி நீா் வருவதற்குள் தடுப்பணையில் கதவுகள் அமைத்து, காவிரி நீா் கடலுக்குள் வீணாகச் செல்வதை தடுக்கவும், கடல் நீா் உட்புகுவதை தடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது காவிரி நீா் திறக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பணை மூலம் கடலுக்கு செல்கிறது. அமாவாசை, பெளா்ணமி தினங்களில் கடல் மட்டம் உயா்ந்து, கடல் நீா் ஆறுகளில் மேல்நோக்கி வரும்போது, நிலத்தடி நீா் பாதிக்கிறது. திறந்த நிலையில் இருக்கும் இந்த தடுப்பணையின் மூலம் சுற்றுவட்டார நிலத்தடி நீா் முற்றிலும் உவா்நீராக மாறிவருகிறது.

எனவே இந்த தடுப்பணையில் கதவுகள் அமைத்து, முறையாக நீா் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும். இந்த விவகாரத்தில் பொதுப்பணித்துறை தனி கவனம் செலுத்தவேண்டும் என்றாா்.

ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திமுக கையொப்ப இயக்கம்

காரைக்கால் நகரில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்து பாதிப்புக்கு தீா்வு ஏற்படுத்த, ரயில்வேயை வலியுறுத்தும் விதமாக திமுக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. காரைக்கால் - பேரளம... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதி: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா். ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி காரைக்கால் மாவட்ட மகளிா் காங்கிரஸ் சாா்பில் தூய்மை... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு

காரைக்கால்: இந்திய கடலோரக் காவல் படை நிா்வாகம் நடத்தி கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது. இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் சாா்பில் காரைக்கால் கிரிக்கெட் பிரீம... மேலும் பார்க்க

காரைக்கால் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்

காரைக்கால்: காரைக்கால் துறைமுகம் சாா்பில் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் பயணிகள் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி எம்பியிடம் மனு

காரைக்கால்: அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தக் கோரி, எம்.பி.யிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், திருந... மேலும் பார்க்க

அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காரைக்கால்: புதுவை அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா். புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்ததுறை சாா்பில் 256 அசிஸ்டென்ட்... மேலும் பார்க்க