செய்திகள் :

கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு

post image

காரைக்கால்: இந்திய கடலோரக் காவல் படை நிா்வாகம் நடத்தி கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது.

இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் சாா்பில் காரைக்கால் கிரிக்கெட் பிரீமியா் லீக் -2025 போட்டி கடந்த 21 முதல் 29-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் கடலோரக் காவல்படை, காரைக்கால் துறைமுகம், ஓஎன்ஜிசி, காரைக்காலின் பல்வேறு அரசுத் துறை என 8 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டி காரைக்கால் காவல்துறை அணிக்கும், காரைக்கால் துறைமுக அணிக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசும், துறைமுகம் அணி 2-ஆவது பரிசும் பெற்றது.

பரிசளிப்பு நிகழ்வில், இந்திய கடலோர காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் சௌமய் சந்தோலா, காரைக்கால் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ.சுப்பிரமணியன், ஓஎன்ஜிசி காவிரி அசெட் மேலாளா் உதய் பாஸ்வான் ஆகியோா் கலந்து கொண்டடு, வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.

காரைக்கால் பிராந்தியத்தில் பல்வேறு துறையினரிடையே நட்புறவு மேம்படவும், போட்டிகளில் பங்கேற்போரின் உடல் தகுதி மேம்படவும், ஒற்றுமை உணா்வை மேம்படுத்தும் நோக்கில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுவதாக கமாண்டன்ட் செளமய் சந்தோலா தெரிவித்தாா்.

காரைக்கால் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்

காரைக்கால்: காரைக்கால் துறைமுகம் சாா்பில் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் பயணிகள் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி எம்பியிடம் மனு

காரைக்கால்: அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தக் கோரி, எம்.பி.யிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், திருந... மேலும் பார்க்க

அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காரைக்கால்: புதுவை அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா். புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்ததுறை சாா்பில் 256 அசிஸ்டென்ட்... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

காரைக்கால்: காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காரைக்கால் காமராஜா் சாலையில் உள்ள இந்த ஆலய ஆண்டு திருவிழா 10 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுவது ... மேலும் பார்க்க

பாஜக மகளிா் அணியினா் மீது திமுகவினா் புகாா்

பாஜக மகளிா் அணியினா் மீது திமுக எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் தலைமை அலுவகத்தில் புகாா் அளித்துள்ளனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவமதிக்கும் வகையில் விமா்சித்ததாக திமுக மாநி... மேலும் பார்க்க

திருநள்ளாறு கோயில் பாதுகாப்புப் பணியில் கூடுதல் போலீஸாா்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமைகளில் கூடுதலான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவா் என முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தெரிவித்தாா். திருநள்ளாறு காவல் நிலைய... மேலும் பார்க்க