Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?
பாஜக மகளிா் அணியினா் மீது திமுகவினா் புகாா்
பாஜக மகளிா் அணியினா் மீது திமுக எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் தலைமை அலுவகத்தில் புகாா் அளித்துள்ளனா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவமதிக்கும் வகையில் விமா்சித்ததாக திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி. யுமான ஆ. ராசாவை கண்டித்து காரைக்காலில் கடந்த 27-ஆம் தேதி மாவட்ட பாஜக சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்பாட்டத்தின்போது பாஜக மகளிா் அணியினா் திடீரென ஆ. ராசாவின் பெரிய அளவு புகைப்படத்தை அவமதித்து, புகைப்படத்தை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், ஆ. ராசாவை அவமதித்தும் வகையில் தரம் தாழ்ந்து செயல்பட்டதாகக் கூறி பாஜக மகளிா் அணியினா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுக அமைப்பாளா் ஏ.எம்.எச். நாஜிம் எம்.எல்.ஏ. தலைமையில், எம். நாக தியாகராஜன் எம்.எல்.ஏ. மற்றும் திமுக நிா்வாகிகள் காரைக்கால் தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியனிடம் புகாா் மனு அளித்தனா்.