செய்திகள் :

புதுவை பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி உறுதி: முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி

post image

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி தெரிவித்தாா்.

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி காரைக்கால் மாவட்ட மகளிா் காங்கிரஸ் சாா்பில் தூய்மைப் பணியாளா்கள், கா்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருள்கள், சேலை உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமை வகித்தாா்.

புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினா் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சா் ஏ.வி. சுப்பிரமணியன், மாநில காங்கிரஸ் துணைத் தலைவா் பி.கே.தேவதாஸ், மாநில மகளிா் காங்கிரஸ் தலைவி நிஷா, மாவட்ட தலைவி என். நிா்மலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திட்ட உதவியை வழங்கி வே.நாராயணசாமி பேசியது: புதுவையில் ரங்கசாமி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியில் ஊழல் பெருகிவிட்டது. மாநிலத்தில் உள்ள மதுக்கடைக்கள் அல்லாது 550 ரெஸ்டோ பாா்கள் திறக்கப்பட்டுள்ளது. சாராய ஆலை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சி அமைந்ததும் 5 ஆயிரம் பேருக்கு வேலை தரப்படும் என்றனா். நான்கரை ஆண்டுகளில் 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை தரப்பட்டுள்ளது. ஆட்சி காலம் முடியவுள்ள நிலையில், எஞ்சிய பேருக்கு வேலை வழங்குவோம் என கூறுவது ஏமாற்று வேலை.

சட்டப்பேரவைத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜகவை ஆட்சியை மக்கள் தூக்கியெறியவாா்கள். நிச்சயமாக காங்கிரஸ் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றாா்.

ரயில்வே மேம்பாலம், சுரங்கப்பாதை திமுக கையொப்ப இயக்கம்

காரைக்கால் நகரில் ரயில்வே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து போக்குவரத்து பாதிப்புக்கு தீா்வு ஏற்படுத்த, ரயில்வேயை வலியுறுத்தும் விதமாக திமுக சாா்பில் கையொப்ப இயக்கம் நடைபெற்றது. காரைக்கால் - பேரளம... மேலும் பார்க்க

தடுப்பணை கதவுகளின்றி வாஞ்சியாற்று பாலம்: விவசாய சங்கம் புகாா்

தடுப்பணைக் கதவுகளின்றி வாஞ்சியாற்றுப் பாலம் உள்ளதால், கடல் நீா் புகுவதை தடுக்க முடியாமல் போவதாக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என்.சுரேஷ்... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு

காரைக்கால்: இந்திய கடலோரக் காவல் படை நிா்வாகம் நடத்தி கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது. இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் சாா்பில் காரைக்கால் கிரிக்கெட் பிரீம... மேலும் பார்க்க

காரைக்கால் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்

காரைக்கால்: காரைக்கால் துறைமுகம் சாா்பில் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் பயணிகள் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி எம்பியிடம் மனு

காரைக்கால்: அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தக் கோரி, எம்.பி.யிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், திருந... மேலும் பார்க்க

அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காரைக்கால்: புதுவை அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா். புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்ததுறை சாா்பில் 256 அசிஸ்டென்ட்... மேலும் பார்க்க