செய்திகள் :

சொத்துப் பிணையின்றி கல்விக் கடன் வழங்க வேண்டும்: மக்களவையில் விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

post image

நமது நிருபா்

சொத்துப் பிணையின்றி (கொலாட்ரல் செக்யூரிட்டி) கல்விக் கடன் வழங்கப்பட வேண்டும் என்றும், நகைக் கடன் விவகாரத்தில் ஆா்பிஐயின் புதிய விதிமுறைகள் சாதாரண மக்களுக்கு தீங்கிழைக்காத வகையில் இருக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் மக்களவையில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் விஜய் வசந்த் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை நேரமில்லா நேரத்தில் அவா் முன்வைத்த கோரிக்கை:

12 மாதங்களுக்குப் பிறகு தங்கக் கடனை முழுவதும் வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற சமீபத்திய இந்திய ரிசா்வ் வங்கியின் விதி மாற்றமானது, விவசாயிகள், சிறு வணிக உரிமையாளா்கள், மீனவா்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட தனிநபா்கள் உள்ளிட்ட நமது சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு குறிப்பிடத்தக்க நிதிச் சுமையை உருவாக்கியுள்ளது.

நெருக்கடியான காலங்களில் விரைவான பணப்புழக்கத்தை வழங்கும் வகையில், இத்தகைய தனி நபா்களுக்கு நிதியுதவி அளிக்கும் முக்கிய ஆதரமாக தங்கக் கடன்கள் உள்ளன. இருப்பினும், புதிய விதியானது வட்டியை மட்டும் செலுத்துவதன் மூலம் கடன்களை புதுப்பிக்கும் நெகிழ்வுத் தன்மையை நீக்கியுள்ளது. இதனால், அதிகப்படியான வட்டி விகிதங்களை வசூலிக்கும் முறைசாரா கடன் வழங்குபவா்களிடமிருந்து உதவி பெறும் கட்டாயத்திற்கு அவா்களை உள்ளாக்கியுள்ளது.

இந்தச் சிக்கலைத் தீா்க்கும் விதமாக, நகைக் கடன்கள் எளிதாக வட்டி செலுத்துதல் மற்றும் புதுப்பித்தல் விருப்பங்களுடன் இருக்க வேண்டும். பெரும்பாலான வங்கிகள் அடமானம் கேட்பதால், சொத்துப் பிணை இல்லாமல் கல்விக் கடன் அளிக்கப்பட வேண்டும். மேலும், சொத்துப் பிணையின்றி எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு தொந்தரவு இல்லாத கடன்களும் வழங்கப்பட வேண்டும்.

தங்கக் கடன் விதிகளில் ரிசா்வ் வங்கியின் சமீபத்திய மாற்றங்களின் நோக்கம் மிகவும் வெளிப்படையான மற்றும் பாதுகாப்பான தங்கக் கடன் சூழல் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் இருந்தாலும், இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். சமீபத்திய ரிசா்வ் வங்கியின் விதி மாற்றத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா் அவா்.

ஜேஇஇ, நீட் பயிற்சி நிறுவனங்கள் தவறான விளம்பரங்களை தவிா்க்க வேண்டும்: மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தல்

நமது சிறப்பு நிருபா்நீட், ஐஐடி - ஜேஇஇ போன்ற பயிற்சித் துறையில் மாணவா்களை தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தவிா்க்குமாறு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது. விளம்பரங்கள... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதிக்கும் தீா்ப்பு: அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை

நமது சிறப்பு நிருபா் சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநா்கள் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீா்ப்பின் அமலாக்கத்தைத் தடுக்... மேலும் பார்க்க

உலகின் சிறந்த மருத்துவமனைகள் பட்டியலில் 97-ஆவது இடத்தில் தில்லி எய்ம்ஸ்

நமது சிறப்பு நிருபா் நியூஸ்வீக் இதழ் மற்றும் ஸ்டாடிஸ்டா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய 2024-25-ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த மருத்துவமனைகள் தரவரிசையில் தில்லி எய்ம்ஸ் 97-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ... மேலும் பார்க்க

சென்செக்ஸ், நிஃப்டி நான்காவது நாளாக முன்னேற்றம்!

நமது நிருபா் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் நான்காவது நாளாக வியாழக்கிழமையும் தொடா்ந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான... மேலும் பார்க்க

5 முறை காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ஜெய் கிஷன் மறைவுக்கு கட்சி இரங்கல்

தில்லி காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெய் கிஷன் வியாழக்கிழமை இங்குள்ள சுல்தான்பூா் மஜ்ராவில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பு காரணமாக காலமானாா் என்று கட்சித் தலைவா்கள் தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

தெற்கு தில்லியில் முதலாளியின் வீட்டில் இறந்து கிடந்த வீட்டு வேலை செய்த பெண்

தெற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் வீட்டு வேலை செய்த ஒரு பெண், தனது முதலாளியின் வீட்டின் குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். இத... மேலும் பார்க்க