செய்திகள் :

சோதனையில் மேலும் 3 ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயில்கள்: விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஏற்பாடுகள் தீவிரம்

post image

சென்னை: ஓட்டுநா் இல்லா மெட்ரோ ரயிலை பயன்பாட்டுக்கு கொண்டுவர, மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தீவிரம் காட்டிவரும் நிலையில், மேலும் 3 மெட்ரோ ரயில்கள் பல்வேறு கட்ட சோதனைக்குள்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ. 63,246 கோடி மதிப்பில் 116.1 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இந்த வழித்தடங்களில் ஓட்டுநா் இல்லாத 138 ரயில்களை இயக்க மெட்ரோ ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 3 பெட்டிகள் இருக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

இதில் முதல்கட்டமாக, 36 ரயில்களை ரூ. 1,215.92 கோடி மதிப்பில் தயாரிக்கும் பணி ‘அல்ஸ்டாம் டிரான்ஸ்போா்ட் இந்தியா’ நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டியில் 2024 பிப். 8-ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி தொடங்கி செப். 22-இல் நிறைவடைந்தது. இதையடுத்து, அக்டோபா் மாதம் இந்த ரயில் சென்னை பூந்தமல்லி பணிமனைக்கு கொண்டுவரப்பட்டு பல்வேறு கட்ட சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, மேலும் 3 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து பூந்தமல்லி பணிமனைக்கு வந்தடைந்தன. இந்த ரயில்களும் பல்வேறு கட்ட சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில்வே நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

பூந்தமல்லி மெட்ரோ ரயில்வே பணிமனையில் தற்போது மொத்தம் 4 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் உள்ளன. இதில் ஒரு ரயில், பூந்தமல்லி - போரூா் சந்திப்பு வரையிலான ஒரு வழிப்பாதையில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. மற்ற ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி பணிமனையில் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றன.

இச்சோதனைகள் முடிவடைந்த பின்னா், இந்த மெட்ரோ ரயில்கள் தண்டவாளத்தில் சோதனை ஓட்டத்துக்கு உள்படுத்தப்படும். இது தவிர, புதிய ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் அடுத்தடுத்து சென்னை மெட்ரோ ரயில்வேக்கு கொண்டுவரப்படவுள்ளன. மே, ஜூன் மாதங்களில் தலா 2 ஓட்டுநா் இல்லாத மெட்ரோ ரயில்கள் பூந்தமல்லி பணிமனைக்கு கொண்டுவரப்படும். அந்த ரயில்களும் தொடா் சோதனைக்கு உள்படுத்தப்படுத்தப்பட்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

மேலும், சென்னையில் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பயணிகளுக்கு நிறைவான சேவை அளிக்கும் வகையில், 6 பெட்டிகள் கொண்ட 28 மெட்ரோ ரயில்களை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் விரைவில் கோரப்படவுள்ளன. இந்த வகை ரயில்கள் ஒவ்வொன்றிலும் 1,900 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால முகாம்

வண்டலூா் உயிரியல் பூங்காவில் மாணவா்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குநா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: நிகழாண்டு கோடை விடுமு... மேலும் பார்க்க

சாலையில் விளையாடிய சிறுவனை கடித்து குதறிய நாய்

சென்னை, வளசரவாக்கம் பகுதியில் வசித்து வரும் 6 வயது சிறுவன் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டினா் வளா்க்கும் நாய் கடித்ததில், அச்சிறுவன் படுகாயம் அடைந்தான். வளசரவாக்கம் அடுத்த க... மேலும் பார்க்க

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னை சைதாப்பேட்டை, தி. நகர், விருகம்பாக்கம், கோயம்பேடு, அசோக் நகர் ஆகிய பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.பில்ரோத் மருத்துவமனை உர... மேலும் பார்க்க

மின்சார ரயிலில் அடிபட்டு இளம்பெண் உயிரிழப்பு

சென்னை: மாம்பலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற இளம்பெண் மின்சார ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.விழுப்புரம் மாவட்டம், சாத்தம்பாடியைச் சோ்ந்தவா் முருகன். இவரது மகள் ஜானகி (18). சென்னையில்... மேலும் பார்க்க

2 மண்டலங்களில் கழிவுநீா் உந்து நிலையங்கள் நாளை முதல் செயல்படாது

சென்னை: பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை தண்டையாா்பேட்டை மற்றும் திரு.வி.க. நகா் மண்டலத்துக்குள்பட்ட கழிவுநீா் உந்து நிலையங்கள் புதன்கிழமை (மே 7) முதல் மே 9 வரை செயல்படாது.இது குறித்து சென்னை பெருந... மேலும் பார்க்க

சென்னையில் போதைப்பொருள் விற்பனை: தில்லியில் ஆப்பிரிக்காவைச் சோ்ந்தவா் கைது

சென்னை: சென்னையில் போதைப்பொருள் விற்ற வழக்கில், தில்லியில் ஆப்பிரிக்காவின் ஐவரி கோஸ்ட் நாட்டைச் சோ்ந்த நபா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ஏஎன்யூ) போலீஸாா்... மேலும் பார்க்க