செய்திகள் :

ஜகதீப் தன்கர் ராஜினாமா: "நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்" - பிரதமர் மோடி வாழ்த்து

post image

குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்தார் - இதுதான் இந்திய அரசியல் களத்தின் தற்போதைய 'பரபர' டாப்பிக்.

ஜகதீப் தன்கர் ராஜினாவும், சந்தேகங்களும்!

உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்வதாக ஜகதீப் தன்கர் கூறியிருக்கிறார். ஆனால், இவரது ராஜினாமாவிற்குப் பின்னால், ஏதோ ஒரு காரணம் இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.

ஜகதீப் தன்கர்
ஜகதீப் தன்கர்

மோடி பதிவு

இந்த நிலையில், ஜகதீப் தன்கரின் ராஜினாமா குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அதில், "இந்தியாவின் குடியரசுத் துணைக் தலைவர் உள்பட பல்வேறு பதவிகளில், நமது நாட்டிற்குச் சேவை செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தார் ஸ்ரீ ஜகதீப் தன்கர் ஜி. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுகிறேன்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுக்கொண்ட திரௌபதி முர்மு

நேற்று ஜக்தீப் தன்கர் ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்திருந்தார். அதற்கான ஒப்புதலைத் தற்போது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கொடுத்துள்ளார்.

இந்த ஒப்புதல் தற்போது உள்துறை அமைச்சகத்திடம் சென்றுள்ளது. விரைவில், இதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025

* Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! - காரணம் என்ன? * “ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” -ஜெய்ராம் ரமேஷ்* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?* உச... மேலும் பார்க்க

புதுச்சேரி: அரசுப் பணிகளில் கொல்லைப்புற பணி நியமனங்கள்! - சர்ச்சை வளையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத புதுச்சேரி அரசுபுதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2011 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் ரங்கசாமியால், பல்நோக்கு ஊழியர்கள், தொழில்நு... மேலும் பார்க்க

"இதைக் கூறுபவர்கள் முதலில்..." - சொந்தக் கட்சித் தலைவர் பேச்சுக்கு சசி தரூர் எதிர்வினை!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதிலிருந்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மோடி மற... மேலும் பார்க்க

மதிமுக-விலிருந்து கூண்டோடு வெளியேறும் ஆதரவாளர்கள்; மல்லை சத்யாவின் அடுத்த மூவ் என்ன?!

ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்த இடத்தில் மல்லை சத்யா இருந்தார். கொரோனா நேரத்தில் வைகோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் திடீரென துரை வைகோ கட்சிக்குள் என்ட்ரியானர். பிறகு ம.தி.மு.க-விலிரு... மேலும் பார்க்க