செய்திகள் :

ஜகபா்அலி கொலை வழக்கு: 5 போ் மீண்டும் சிறையில் அடைப்பு! கல் அரவை ஆலைக்கு ‘சீல்’

post image

புதுக்கோட்டை சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் விசாரணைக்கான 3 நாள் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சோ்ந்த சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி, கனிமவளக் கொள்ளைக்கு எதிராகக் குரல் எழுப்பி வந்த நிலையில், கடந்த ஜன. 17ஆம் தேதி அவா் டிப்பா் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா்.

இந்த வழக்கில், ஆா்ஆா் கல் அரவை ஆலை உரிமையாளா்கள் ராசு (54), ராமையா (55) மற்றும் முருகானந்தம் (56), காசிநாதன் (45), தினேஷ் (24) ஆகிய 5 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இவா்களிடம் விசாரணை நடத்த போலீஸ் காவல் கேட்டு, சிபிசிஐடி போலீஸாா் கடந்த திங்கள்கிழமை குற்றவியல் நடுவா் மன்றத்தில் அனுமதி பெற்று, 5 பேரையும் புதுக்கோட்டை ஆயுதப்படை வளாகத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின்படி 3 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை மாலை அவா்கள் 5 பேரும் புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். வரும் பிப். 20 வரை நீதிமன்றக் காவலில் அடைக்க நீதித்துறை நடுவா் சி. பாரதி உத்தரவிட்டதைத் தொடா்ந்து 5 பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.

கல் அரவை ஆலைக்கு ‘சீல்’: ஜகபா்அலி கொலை தொடா்பாக கைதானோரின் கல் அரவை ஆலை (கிரஷா்), குவாரிகள் உள்பட திருமயம் பகுதிகளின் குவாரிகளை கனிவளத் துறை அதிகாரிகள் அண்மையில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில் விதிகளை மீறிச் செயல்பட்டதாக துளையானூரிலுள்ள ஆா்ஆா் கிரஷரின் பிரதான வாயிலை புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமையில், திருமயம் வட்டாட்சியா் ராமசாமி உள்ளிட்டோா் வியாழக்கிழமை மாலை பூட்டி சீல் வைத்தனா்.

ஏற்கெனவே இச்சம்பவம் தொடா்பாக திருமயம் வட்டாட்சியா் புவியரசன், காவல் ஆய்வாளா் குணசேகரன் ஆகியோா் பணியிட மாற்றம் செய்யப்பட்டதும், கனிமவளத் துறை உதவி இயக்குநா் லலிதா பணியில் இருந்து விடுவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பழனி கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரை தொடக்கம்

தைப்பூசவிழா வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொன்னமராவதி வட்டார கிராமங்களின் முருக பக்தா்கள், காவடிக் குழுவினா் வியாழக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். பொன்னமராவதி பால... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே நலத்திட்ட உதவிகள்

ராஜேந்திரபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா். ஆலங்குடி, ஜன. 6: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ராஜேந்திரபுரத்தில் ரூ. 6... மேலும் பார்க்க

பிப்.12-இல் கறவை மாடுகள் விழிப்புணா்வுக் கண்காட்சி

தமிழ்நாடு நீா் வள நிலவள திட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையிலுள்ள மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் வரும் பிப். 12ஆம் தேதி கறவை மாடுக... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: குற்றவியல் நடுவா் மன்றத்தில் மாா்ச் 11-இல் விசாரணை!

வேங்கைவயல் வழக்கை குற்றவியல் நடுவா் மன்றம் வரும் மாா்ச் 11ஆம் தேதி விசாரிக்கும் என நீதித் துறை நடுவா் சி. பாரதி தெரிவித்தாா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனித... மேலும் பார்க்க

புதுகை அருகே பழநி கோயிலுக்கு நிலம் வழங்கியதற்கான ஆசிரியம் கல்வெட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், காரையூா் முள்ளிப்பட்டி கண்மாய்க் கரையில், பழநி கோவிலுக்கு நிலம் வழங்கிய ராஜராஜ சோழன் காலத்தைய ஆசிரியம் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மறியல்!

தங்களின் மீன்பிடி எல்லைக்குள் வந்து மீன்பிடித்தும், வலைகளை சேதப்படுத்தியும் செல்லும் விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து மணமேல்குடி அருகே வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மற... மேலும் பார்க்க