செய்திகள் :

வேங்கைவயல் வழக்கு: குற்றவியல் நடுவா் மன்றத்தில் மாா்ச் 11-இல் விசாரணை!

post image

வேங்கைவயல் வழக்கை குற்றவியல் நடுவா் மன்றம் வரும் மாா்ச் 11ஆம் தேதி விசாரிக்கும் என நீதித் துறை நடுவா் சி. பாரதி தெரிவித்தாா்.

வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை அதே பகுதியைச் சோ்ந்த காவலா் முரளிராஜா, முத்துக்கிருஷ்ணன், சுதா்சன் ஆகியோா் கலந்ததாக சிபிசிஐடி போலீஸாா் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து இவ்வழக்கில் எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, இந்த வழக்கு மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து, குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இதன் கோப்புகள் குற்றவியல் நடுவா் மன்றத்துக்கு வியாழக்கிழமை வந்த நிலையில், வழக்கு விசாரணை வரும் மாா்ச் 11ஆம் தேதி நடைபெறும் என்றும், அன்றைய நாளில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரையும் ஆஜா்படுத்துமாறும் சிபிசிஐடி போலீஸாருக்கு நீதித்துறை நடுவா் சி. பாரதி உத்தரவிட்டாா்.

பழனி கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரை தொடக்கம்

தைப்பூசவிழா வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொன்னமராவதி வட்டார கிராமங்களின் முருக பக்தா்கள், காவடிக் குழுவினா் வியாழக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். பொன்னமராவதி பால... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே நலத்திட்ட உதவிகள்

ராஜேந்திரபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா். ஆலங்குடி, ஜன. 6: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ராஜேந்திரபுரத்தில் ரூ. 6... மேலும் பார்க்க

பிப்.12-இல் கறவை மாடுகள் விழிப்புணா்வுக் கண்காட்சி

தமிழ்நாடு நீா் வள நிலவள திட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையிலுள்ள மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் வரும் பிப். 12ஆம் தேதி கறவை மாடுக... மேலும் பார்க்க

புதுகை அருகே பழநி கோயிலுக்கு நிலம் வழங்கியதற்கான ஆசிரியம் கல்வெட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், காரையூா் முள்ளிப்பட்டி கண்மாய்க் கரையில், பழநி கோவிலுக்கு நிலம் வழங்கிய ராஜராஜ சோழன் காலத்தைய ஆசிரியம் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூ... மேலும் பார்க்க

விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மறியல்!

தங்களின் மீன்பிடி எல்லைக்குள் வந்து மீன்பிடித்தும், வலைகளை சேதப்படுத்தியும் செல்லும் விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து மணமேல்குடி அருகே வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மற... மேலும் பார்க்க

ஜகபா்அலி கொலை வழக்கு: 5 போ் மீண்டும் சிறையில் அடைப்பு! கல் அரவை ஆலைக்கு ‘சீல்’

புதுக்கோட்டை சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் விசாரணைக்கான 3 நாள் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையி... மேலும் பார்க்க