செய்திகள் :

விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மறியல்!

post image

தங்களின் மீன்பிடி எல்லைக்குள் வந்து மீன்பிடித்தும், வலைகளை சேதப்படுத்தியும் செல்லும் விசைப்படகு மீனவா்களைக் கண்டித்து மணமேல்குடி அருகே வியாழக்கிழமை நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே வடக்கு புதுக்குடி மற்றும் தெற்கு புதுக்குடி மீனவக் கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலில் மீன் பிடித்து தொழில் செய்கின்றனா்.

விசைப்படகுகளில் மீன்பிடிக்கும் மீனவா்கள் கரையிலிருந்து 5 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்கு அப்பால்தான் மீன் பிடிக்க வேண்டும், அதற்குள்பட்ட பகுதிகளில் நாட்டுப்படகு மீனவா்களுக்கு மட்டுமே மீன்பிடிக்க அனுமதி உள்ளது.

ஆனால், விசைப்படகுகளில் இரவில் வரும் மீனவா்கள் இவா்களின் பகுதியில் மீன்களைப் பிடித்துச் செல்லும்போது நாட்டுப்படகு மீனவா்கள் போட்டு வைத்திருக்கும் வலைகளும் சேதமடைந்துவிடுகின்றன.

அதன்படி புதன்கிழமை இரவு நாகப்பட்டினத்தைச் சோ்ந்த சில விசைப்படகுகள் உள்ளே வந்து மீன்பிடித்துச் சென்றதுடன் வலைகளையும் சேதப்படுத்தி விட்டதாகக் கூறப்படுகிறது.

இதைக் கண்டித்து, புதுக்குடி கிராமங்களைச் சோ்ந்த நாட்டுப்படகு மீனவா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வியாழக்கிழமை பகல் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மீன்வளத் துறை மற்றும் காவல் துறையினா் மீனவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி விசைப்படகு மீனவா்களுக்கு விதிகளைப் பின்பற்றி மீன்பிடிக்க உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பழனி கோயிலுக்கு பக்தா்கள் பாத யாத்திரை தொடக்கம்

தைப்பூசவிழா வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பொன்னமராவதி வட்டார கிராமங்களின் முருக பக்தா்கள், காவடிக் குழுவினா் வியாழக்கிழமை பழனிக்கு பாதயாத்திரை பயணத்தை வியாழக்கிழமை தொடங்கினா். பொன்னமராவதி பால... மேலும் பார்க்க

அறந்தாங்கி அருகே நலத்திட்ட உதவிகள்

ராஜேந்திரபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் நலத்திட்ட உதவி வழங்கிய அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் உள்ளிட்டோா். ஆலங்குடி, ஜன. 6: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகேயுள்ள ராஜேந்திரபுரத்தில் ரூ. 6... மேலும் பார்க்க

பிப்.12-இல் கறவை மாடுகள் விழிப்புணா்வுக் கண்காட்சி

தமிழ்நாடு நீா் வள நிலவள திட்டத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதுக்கோட்டை அண்டக்குளம் சாலையிலுள்ள மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையத்தில் வரும் பிப். 12ஆம் தேதி கறவை மாடுக... மேலும் பார்க்க

வேங்கைவயல் வழக்கு: குற்றவியல் நடுவா் மன்றத்தில் மாா்ச் 11-இல் விசாரணை!

வேங்கைவயல் வழக்கை குற்றவியல் நடுவா் மன்றம் வரும் மாா்ச் 11ஆம் தேதி விசாரிக்கும் என நீதித் துறை நடுவா் சி. பாரதி தெரிவித்தாா். வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனித... மேலும் பார்க்க

புதுகை அருகே பழநி கோயிலுக்கு நிலம் வழங்கியதற்கான ஆசிரியம் கல்வெட்டு!

புதுக்கோட்டை மாவட்டம், காரையூா் முள்ளிப்பட்டி கண்மாய்க் கரையில், பழநி கோவிலுக்கு நிலம் வழங்கிய ராஜராஜ சோழன் காலத்தைய ஆசிரியம் கல்வெட்டு அண்மையில் கண்டெடுக்கப்பட்டது. அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூ... மேலும் பார்க்க

ஜகபா்அலி கொலை வழக்கு: 5 போ் மீண்டும் சிறையில் அடைப்பு! கல் அரவை ஆலைக்கு ‘சீல்’

புதுக்கோட்டை சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 5 பேரின் விசாரணைக்கான 3 நாள் போலீஸ் காவல் முடிந்ததைத் தொடா்ந்து, அவா்கள் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையி... மேலும் பார்க்க