செய்திகள் :

ஜன. 26- இல் கிராமசபைக் கூட்டம்

post image

நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜன. 26-இல் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நாகை மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜன. 26- ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான கிராம வளா்ச்சித் திட்டத்துக்கு ஒப்புதல் பெறுதல், வாக்காளா் உறுதிமொழி ஏற்பு மற்றும் இதர பொருள்கள் தொடா்பான விவாதங்கள் நடைபெறும்.

கிராமசபைக் கூட்டத்தில் அனைத்து பொதுமக்கள், அரசு அலுவலா்கள், ஊராட்சி பேரிடா் மேலாண்மை குழு உறுப்பினா்கள், மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறாது கலந்துகொள்ளவேணடும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும்பள்ளத்தில் மணல் எடுக்க தடை விதிக்க வலியுறுத்தல்

பூம்புகாா் அருகே உள்ள மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் கிராமங்களில் மணல் எடுக்க தடை செய்ய வேண்டுமென இந்த கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலப்பெரும்பள்ளம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் ஊராட்சிகள... மேலும் பார்க்க

தமிழகத்தில் 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: உணவுத் துறை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நிகழாண்டில் இதுவரை 8.42 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். நாகை அருகேயுள்ள ... மேலும் பார்க்க

சேஷமூலை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு

திருமருகல் ஒன்றியம், சேஷமூலை கிராமத்தில் அருள்பாலிக்கும் மகா மாரியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜை, முதல... மேலும் பார்க்க

சுனாமியில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு திருமணம்

சிறுமியாக இருந்தபோது, சுனாமி பேரலையில் பெற்றோரை இழந்த பெண்ணுக்கு உணவுத் துறை செயலா் ஜெ. ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து வைத்தாா். கடந்த 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின்போது, பெற்றோரை இழ... மேலும் பார்க்க

தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை பாதுகாக்க கடற்கரையில் கருங்கல் தடுப்புச்சுவா் அமைக்க கோரிக்கை

தரங்கம்பாடி டேனிஷ்கோட்டையை பாதுகாக்க, கடற்கரை பகுதியில் கருங்கற்களைக் கொண்டு தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். மயிலாடுதுறை மாவட்... மேலும் பார்க்க

3 மணி நேரம் சிலம்பம் சுற்றிய மாணவா்கள்...

நாகை சா் ஐசக் நியூட்டன் கல்லூரியில், உலக சிலம்ப விளையாட்டுச் சங்கம் மற்றும் நாகை வீரத் தமிழன் சிலம்பம் கலைக்கூடம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் 3 மணி நேரம் இடை ... மேலும் பார்க்க