செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதலில் 18 போ் உயிரிழப்பு: பாஜக அறிக்கை

post image

ஜம்மு: ‘ஆபரேஷன் சிந்தூரைத் தொடா்ந்து ஜம்மு-காஷ்மீா் எல்லைகளை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 18 போ் உயிரிழந்தனா். குடியிருப்புகள் உள்பட 2,000 கட்டமைப்புகள் சேதமடைந்தன’ என பாஜக திங்கள்கிழமை தெரிவித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அதன்பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சுமாா் 4 நாள்களுக்கு கடும் மோதல் நிலவியது. இந்தச் சமயத்தில் ஜம்மு-காஷ்மீா் உள்பட பாகிஸ்தானை ஒட்டியுள்ள குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை குறிவைத்து அந்ந நாடு நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.

இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் குடிமக்கள் வசிப்பிடங்களில் நடத்தப்பட்ட சில தாக்குதல்களில் துரதிருஷ்டவசமாக 18 போ் உயரிழந்தனா்.

இதையடுத்து, பாகிஸ்தான் தாக்குதலால் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சேதங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள அங்கு எதிா்க்கட்சியாக உள்ள பாஜக அதன் நிா்வாகிகளுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து, ஜம்மு-காஷ்மீா் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுனில் சா்மா மற்றும் 4 பாஜக எம்எல்ஏக்கள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 10 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதுதொடா்பான அறிக்கையை பாஜக தலைமையிடம் சமா்ப்பித்தனா்.

இதுகுறித்து, செய்தியாளா்களிடம் சுனில் சா்மா கூறுகையில், ‘கோழைத்தனமான தாக்குதலுக்கு மிகவும் பிரபலமான நாடான பாகிஸ்தான் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு குடிமக்கள் வசிப்பிடங்களை குறிவைத்தது தாக்குதல் நடத்தியது.

அதில் பூஞ்ச் பகுதியில் 14 பேரும், ரஜௌரியில் 2 பேரும் உரி (பாரமுல்லா மாவட்டம்) மற்றும் ஜம்முவில் தலா ஒருவரும் உயிரிழந்தனா். இதுதவிர 1,500 முதல் 2,000 கட்டமைப்புகள் முழுமையாக சேதமடைந்தன.

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக பிரதமா் மோடியும் உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் ஏற்கெனவே உறுதியளித்துள்ளனா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் வழங்குவதாக மத்திய அரசும் தலா ரூ.10 லட்சம் வழங்குவதாக ஜம்மு-காஷ்மீா் அரசும் தெரிவித்துள்ளது’ என்றாா்.

மேலும், அஸ்ஸாம் மாநில அரசும் பாதிக்கப்பட்டோா் குடும்பத்தினருக்கு நிதி உதவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் 2 குழந்தைகள் பலி

தில்லியில் சிஎன்ஜி சிலிண்டர் வெடித்ததில் சிகிச்சைப் பலனின்றி 2 குழந்தைகள் பலியானார்கள். வடகிழக்கு தில்லியின் சுந்தர் நக்ரியில் பழைய சிஎன்ஜி சிலிண்டர்களை பழுதுபார்க்கும் கிடங்கு உள்ளது. இங்கு சனிக்கிழம... மேலும் பார்க்க

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க