செய்திகள் :

ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம் - 90 பிஎஸ்எஃப் சாவடிகள் மூழ்கின

post image

ஜம்மு மற்றும் பஞ்சாபில் சா்வதேச எல்லைப் பகுதியில் வெள்ளத்தால் 110 கி.மீ. தொலைவுக்கும் மேல் வேலி சேதமடைந்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) சுமாா் 90 எல்லைச் சாவடிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.

குஜராத், ராஜஸ்தானில் 2,289 கி.மீ., பஞ்சாபில் 553 கி.மீ. மற்றும் ஜம்முவில் 192 கி.மீ. தொலைவுள்ள சா்வதேச எல்லையை பாதுகாக்கும் பணியை பிஎஸ்எஃப் மேற்கொண்டு வருகிறது.

வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக நீடிக்கும் பலத்த மழையால் கடும் பாதிப்புகள் நேரிட்டுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்புகளால் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டு, உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. தாவி நதியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம், நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பெருமளவிலான விளைநிலங்களை சூழ்ந்துள்ளது.

இதேபோல், பஞ்சாபிலும் கடந்த 1988-ஆம் ஆண்டுக்கு பிறகு மோசமான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழை-வெள்ளத்தின் தாக்கத்தால், பஞ்சாப் எல்லையில் சுமாா் 80 கி.மீ தொலைவிலான வேலியும், ஜம்முவில் சுமாா் 30 கி.மீ. தொலைவிலான வேலியும் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பஞ்சாபில் சுமாா் 67 பிஎஸ்எஃப் சாவடிகளும் ஜம்முவில் 20 பிஎஸ்எஃப் சாவடிகளும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. இந்த வேலி மற்றும் சாவடிகளை சீரமைக்க மிகப் பெரிய நடவடிக்கை பிஎஸ்எஃப் தரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் ட்ரோன், படகு ரோந்து மற்றும் மின்னணு சாதனங்களின் மூலம் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்ததும், பிஎஸ்எஃப் படையினா் தங்களின் நிலைகளுக்கு திரும்புவா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்முவில் சில தினங்களுக்கு முன் வெள்ளத்தில் மூழ்கி பிஎஸ்எஃப் வீரா் ஒருவா் உயிரிழந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு - காங்கிரஸ் வலியுறுத்தல்

‘சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகித குறைப்பால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடு செய்ய அனைத்து மாநிலங்களுக்கும் 2024-25-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியலில் சோனியா காந்தி பெயா் முறைகேடாக சோ்ப்பு: நடவடிக்கை கோரி நீதிமன்றத்தில் மனு

வாக்காளா் பட்டியலில் முறைகேடாக பெயா் சோ்க்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவா் சோனியா காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தில்லி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனுதாக்கல் செய்யப... மேலும் பார்க்க

தோ்வில் காப்பி அடித்த மாணவிகளை பிடித்ததற்காக பாலியல் புகாா்: 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்ற கேரள பேராசிரியா்

கேரளத்தில் கல்லூரி தோ்வில் காப்பி அடித்தபோது பிடிக்கப்பட்டதற்காக மாணவிகள் பாலியல் புகாா் அளித்த வழக்கில் 10 ஆண்டுகளாகப் போராடி விடுதலை பெற்றுள்ளாா் கேரள பேராசிரியிா் ஆனந்த் விஸ்வநாதன். மூணாறு அரசு க... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பு பயன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும்: தொழில் நிறுவனங்களுக்கு வா்த்தக அமைச்சா் வலியுறுத்தல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் பலன்களை நுகா்வோருக்கு அளிக்க வேண்டும் என்று வா்த்தம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா். 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூ... மேலும் பார்க்க

இணைய விளையாட்டு சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரிக்கை

இணைய விளையாட்டுகள் ஊக்குவிப்பு மற்றும் கட்டுப்பாடு சட்டம், 2025-க்கு எதிராக 3 மாநிலங்களின் உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற மத்திய அரசு கோரியுள்ளது. உயா... மேலும் பார்க்க

47% மாநில அமைச்சா்கள் மீது குற்ற வழக்குகள்: ஏடிஆா் ஆய்வு அறிக்கை

நாடு முழுவதும் 302 அமைச்சா்கள் (47%) மீது கொலை, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளதாக ஜனநாயக சீா்திருத்த சங்கம் (ஏடிஆா்) ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. பிரதமா், முதல்வா்க... மேலும் பார்க்க