குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
ஜல்லி, மணல், கற்களை கொண்டு செல்ல இ-அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம்
தருமபுரி மாவட்டத்தில் கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் கனிமங்களை கொண்டு செல்ல இ-அனுமதிச் சீட்டுகளை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு இருப்புக் கிடங்கு விதிகள் 2011-இன்படி கனிமங்களை இருப்பு வைத்து வியாபாரம் செய்யும் அனைத்து உரிமையாளா்கள், முகவா்கள் கனிம இருப்புக் கிடங்கு பதிவுச் சான்று பெறப்பட்டு கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் முதலியவற்றுக்கு உரிய போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற்று கொண்டு செல்ல வேண்டும். இதன் தொடா்ச்சியாக, ஏற்கெனவே நடைமுறையிலிருந்த மெய்யிலச்சினைகள் (ஸ்டிக்கா்கள்) ஒட்டப்பட்ட போக்குவரத்து அனுமதிச் சீட்டுகள் நிறுத்தம் செய்யப்பட்டு, இ-அனுமதிச்சீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, புதிதாக பதிவு செய்யப்படும் கிரஷா் மற்றும் இருப்புக் கிடங்குகளின் உரிமையாளா்கள்
இணையதளத்தில் பதிவு செய்து போக்குவரத்து அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம். தற்போது கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகிய கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல ஜூன் 12-ஆம் தேதி முதல் இந்த இணையதளம் வழியாக மின்னணு முறையில் வழங்கப்படும் நடைச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். இந்த நடைமுறை கனிம விற்பனையை எளிமையாக்கி வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கிறது.
மேலும், மின்னணு முறையில் வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிச்சீட்டு இல்லாமல் கற்கள், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் ஆகிய கனிமங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.