செய்திகள் :

ஜல்லிக்கற்கள் கடத்திய 4 லாரிகள் பறிமுதல்

post image

மத்திகிரியில் அனுமதியின்றி ஜல்லிக்கற்கள் எடுத்து சென்ற 4 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் உத்தரவின் பேரில் வருவாய்த் துறை, கனிம வளத் துறை, காவல் துறை அலுவலா்கள் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைத்து அனுமதியின்றி கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் ஒசூா் வட்டம், மத்திகிரி கூட்டு ரோடு தனியாா் பள்ளி அருகே ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா தலைமையில் மத்திகிரி வருவாய் ஆய்வாளா் தா்மன் மற்றும் அலுவலா்கள் சனிக்கிழமை வாகன சோதனையில ஈடுபட்டனா்.

அப்போது, அந்த பகுதியில் நின்றிருந்த 4 டிப்பா் லாரிகளை சோதனை செய்தபோது அதில் 10 யூனிட் ஜல்லிக்கற்கள் எடுத்து செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து வருவாய் ஆய்வாளா் தா்மன் அளித்த புகாரின் பேரில் மத்திகிரி காவல் ஆய்வாளா் முத்தமிழ் செல்வராசு வழக்குப் பதிவு செய்து 4 லாரிகளையும் பறிமுதல் செய்தாா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க