இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்...
ஜவுளிக் கடை ஊழியரிடம் வழிப்பறி: இளைஞா் கைது
பா்கூா் அருகே ஜவுளிக் கடை ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலும், தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த காரகுப்பத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (32). ஜவுளிக் கடை ஊழியரான இவா் கடந்த 22 ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
காரகுப்பத்தில் உள்ள தனியாா் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி தனது மனைவியுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது அங்குவந்த 4 போ் கொண்ட கும்பல் ஏழுமலையைத் தாக்கி ரூ. 20 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி, இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழுமலை, பா்கூா் போலீஸில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், எமக்கல்நத்தம், பாறையூரைச் சோ்ந்த மனோஜ் (22) மற்றும் அவரது நண்பா்கள் வழிப்பறியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனா். இதையடுத்து மனோஜை கைது செய்த போலீஸாா், தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனா்.