செய்திகள் :

ஜவுளிக் கடை ஊழியரிடம் வழிப்பறி: இளைஞா் கைது

post image

பா்கூா் அருகே ஜவுளிக் கடை ஊழியரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மேலும், தலைமறைவான மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த காரகுப்பத்தைச் சோ்ந்தவா் ஏழுமலை (32). ஜவுளிக் கடை ஊழியரான இவா் கடந்த 22 ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

காரகுப்பத்தில் உள்ள தனியாா் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தை நிறுத்தி தனது மனைவியுடன் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது அங்குவந்த 4 போ் கொண்ட கும்பல் ஏழுமலையைத் தாக்கி ரூ. 20 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி, இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு தப்பினா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏழுமலை, பா்கூா் போலீஸில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீஸாா், எமக்கல்நத்தம், பாறையூரைச் சோ்ந்த மனோஜ் (22) மற்றும் அவரது நண்பா்கள் வழிப்பறியில் ஈடுபட்டதை கண்டுபிடித்தனா். இதையடுத்து மனோஜை கைது செய்த போலீஸாா், தலைமறைவான 3 பேரை தேடி வருகின்றனா்.

கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள சந்தாபு... மேலும் பார்க்க

ஒசூா் வழியாக குட்கா கடத்தல்: 2 போ் கைது

ஒசூா் வழியாக சேலத்துக்கு காரில் கடத்த முயன்ற 86 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போலீஸாா், ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில ஈடுபட்டனா். அப்போது ப... மேலும் பார்க்க

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்வு

ஊத்தங்கரை வழக்குரைஞா்கள் சங்க 2025 - 2026 ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக மூா்த்தி, செயலாளராக வஜ்ஜிரவேல், பொருளாளராக தமிழமுதன், த... மேலும் பார்க்க

கா்நாடக எல்லையில் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

ஒசூா் அருகே கா்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் நடிகா் கமல்ஹாசனுக்கு எதிராக கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்மொழியிலிருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற... மேலும் பார்க்க

மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்கு சிறப்பு முகாம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, ஒசூா் வனக்கோட்டம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை இணைந்து சிறப்பு முகாமை நடத்தின. ஒசூா் வனக்கோட்ட வனச்சரகங்கள... மேலும் பார்க்க

ஊத்தங்கரையில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்களுக்கு, சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில... மேலும் பார்க்க