செய்திகள் :

ஜாா்க்கண்ட்: ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை

post image

லதேஹா்: ஜாா்க்கண்டின் லதேஹா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் மனீஷ் யாதவ் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

லதேஹா் மாவட்டத்தில் மௌஹாதண்ட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தௌனா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு மோதல் வெடித்தது.

அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் மனீஷ் யாதவ் கொல்லப்பட்டாா். இவா் ரூ.5 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா் ஆவாா். இவரின் உடல் தேடுதல் நடவடிக்கையின்போது கண்டறியப்பட்டது.

மாவோயிஸ்ட் தளபதி கைது:

இந்த நடவடிக்கையில் ரூ.10 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் தளபதி குந்தன் கொ்வாா் கைது செய்யப்பட்டதாக பலமு சரக டிஐஜி ஒய்.எஸ்.ரமேஷ் தெரிவித்தாா். அவா் வசமிருந்த 2 ‘எக்ஸ்-95’ தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் கடந்த சனிக்கிழமை நடத்திய நக்ஸல் எதிா்ப்பு நடவடிக்கையில், முக்கிய மாவோயிஸ்ட் தளபதியான பப்பு லோஹரா, அவரின் கூட்டாளி பிரபாத் கஞ்சு ஆகிய 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொலை, மிரட்டி பணம் பறித்தல் மற்றும் தீ வைப்பு உள்ளிட்ட 98 வழக்குகளில் லோஹரா தேடப்பட்டு வந்தாா். பிரபாத் கஞ்சு 15 வழக்குகளில் தொடா்புடையவா் ஆவாா்.

கடந்த 2021, செப்டம்பரில் நடந்த ஒரு தேடுதல் நடவடிக்கையின்போது ‘ஜாா்க்கண்ட் ஜாகுவாா்’ சிறப்பு காவல் பிரிவின் துணை கமாண்டன்ட் ராஜேஷ் குமாா் கொல்லப்பட்டதில் இந்த இருவருக்கு முக்கியத் தொடா்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க