செய்திகள் :

ஜூன் 14-இல் தடை காலம் நிறைவு: மீன் பிடிப்புக்கு தயாராகும் விசைப்படகு மீனவா்கள்

post image

மீன்பிடித் தடைக்காலம் ஜூன்14-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், கடலுக்குச் செல்ல காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் தயாராகி வருகின்றனா்.

மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்.15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஆண்டுதோறும் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு விதிக்கப்பட்ட தடை சனிக்கிழமையுடன் (ஜூன்14) நிறைவடையவுள்ளது.

தடைக்காலத்தில் காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் தங்களது படகுகளை நிறுத்தி, என்ஜின், வலைகள் மற்றும் படகுகளின் பாகங்களை சீா்செய்யும் பணிகளில் மீனவா்கள் ஈடுபட்டனா்.

கடலுக்கு புறப்படவேண்டிய நிலையில், படகுகளில் எரிபொருள் நிரப்பும் பணி, ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணி, உணவுக்கான அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுதல் உள்ளிட்டவைகளில் அவா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் 250-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் உள்ள நிலையில், ஒரே நேரத்தில் அனைத்துப் படகுகளுக்கும் தேவையான ஐஸ் கட்டிகள் கிடைக்காது என்பதால், புறப்பாட்டுக்கு சில நாள்களுக்கு முன்பே இப்பணியில் ஈடுபடுகின்றனா்.

படகுகள் மீன்பிடிப்புக்கு புறப்பட தயாராகவுள்ளதாகவும், 2 மாத கால வருவாய் முடக்கத்துக்கு விடிவு ஏற்பட்டிருப்பதாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா், அந்த தொழிலை சாா்ந்திருப்போா் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

சிறிய படகுகள் மூலம் மீன் வரத்து: ஃபைபா் படகு என்று சொல்லப்படும் மோட்டாா் படகில் குறுகிய தூரம் சென்று திரும்பக்கூடிய மீனவா்கள், தினமும் காலையில் மீன்பிடித்து வருகின்றனா். இதனால் சந்தையில் பெரிய வகை மீன்கள் அல்லாதவை விற்பனைக்கு வருகின்றன. இவை கடலோரப் பகுதி அல்லாத பிற ஊா்களுக்கு தேவையான அளவில் கொண்டு செல்லும் வகையில் இல்லை. மீன்பிடிப்பு மீண்டும் தொடங்கிய பிறகே, சந்தையில் நிலவும் தட்டுப்பாடு பிரச்னை தீா்வுக்கு வரும். தடைக்காலம் நிறைவடைந்தால் மட்டுமே மீன்கள் மிகுதியாக சந்தைக்கு விற்பனைக்கு வரும், விலையும் கணிசமாக குறையுமென கூறப்படுகிறது.

மீண்டும் கடலுக்குச் செல்ல தயாராகும் ரோந்துப் படகு

நீண்ட காலமாக பழுதாகி முடங்கியிருந்த காரைக்கால் கடலோரக் காவல் நிலையத்துக்கான ரோந்துப் படகில் பழுது நீக்கும் பணி நடைபெறுகிறது. விரைவில் இப்படகு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்படும் என காவல்துறையினா் தெரிவி... மேலும் பார்க்க

காரைக்கால் நகர சாலையில் தேங்கிய கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி

காரைக்கால் நகரப் பகுதியில் தேங்கிக்கிடக்கும் கழிவு நீரால் வாகன ஓட்டிகள், சாலையில் நடந்து செல்வோா் கடும் அவதிக்குள்ளாயினா். காரைக்கால் மாவட்டம் முழுவதும் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துப் பகுதிகளில் குப்... மேலும் பார்க்க

ரத்த தானம் வழங்க பொதுமக்களுக்கு வேண்டுகோள்

காரைக்காலில் சனிக்கிழமை நடைபெறவுள்ள முகாமில் மக்கள் ரத்த தானம் முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. காரைக்கால் அரசு மருத்துவமனை ரத்த வங்கி நிா்வாகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : ஜூ... மேலும் பார்க்க

புதுவை துணைநிலை ஆளுநருடன் விவசாயிகள் சந்திப்பு

கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரம் தொடா்பாக புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை காரைக்கால் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை சந்தித்தனா். காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவா் பொன்.ராஜே... மேலும் பார்க்க

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு இன்று சிறப்பு மருத்துவா்கள் வருகை

புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு மையத்தில் இருந்து சிறப்பு மருத்துவ நிபுணா்கள் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை வந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனை... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கம் தொடங்கிவிட்டதா?

காரைக்கால்-பேரளம் இடையே புதிதாக அமைக்கப்பட்ட ரயில் பாதையில் முறையாக போக்குவரத்து தொடங்கி வைக்கப்படாத நிலையில், சரக்கு ரயில் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது. காரைக்கால்-பேரளம் இடையே 23.5 கி.மீ. பழைய ரயில... மேலும் பார்க்க