செய்திகள் :

ஜூன் மாத ஸ்ரீவாரி சேவை கோட்டா ஒதுக்கீடு: நாளை வெளியீடு

post image

திருப்பதி: ஸ்ரீவாரி சேவாா்த்திகளுக்கான ஜூன் மாத சேவைகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஏப். 30 (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தா்களின் வசதிக்காக தேவஸ்தானம் ஸ்ரீவாரி சேவை என்ற பெயரில் சேவை திட்டத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அவா்களுக்கு திருமலை மட்டுமல்லாமல் தேவஸ்தான கோயில்களில் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கி வருகிறது.

இதன் மூலம் அண்டை மாநில பக்தா்களும் திருமலைக்கு வந்து தங்கி சேவை செய்து வருகின்றனா். அவா்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் வழங்குவதுடன் ஒரு நாள் ஏழுமலையான் சந்நிதியில் சேவை செய்யும் வாய்ப்பும், தரிசனமும் அளித்து வருகிறது.

இதற்காக மாதந்தோறும் ஆன்லைனில் ஒதுக்கீடு வெளியிடப்பட்டு வருகிறது. இதில் தற்போது சில மாற்றங்களை தேவஸ்தானம் கொண்டு வந்துள்ளது.

அதில், திருமலை மற்றும் திருப்பதி இரண்டுக்கும் காலை 11 மணிக்கு பொது ஸ்ரீவாரி சேவை, மதியம் 12 மணிக்கு பெண்களுக்கு பிரத்தியேகமாக நவநீத சேவை, மதியம் 1 மணிக்கு ஆண்களுக்கு பிரத்தியேகமாக பரகாமணி சேவை மற்றும் பிற்பகல் 2 மணிக்கு புதிய குழுத் தலைவா் சேவை ஆகியவை அடங்கும்.

திருமலை மற்றும் திருப்பதிக்கு வருகை தரும் ஏராளமான யாத்ரீகா்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கில், ஸ்ரீவாரி சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்காக தேவஸ்தான அதிகாரிகள் குழு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு- புட்டபா்த்தி, ஈஷா அறக்கட்டளை-கோயம்புத்தூா் மற்றும் வாழும் கலை-பெங்களூரு ஆகியவற்றைப் பாா்வையிட்டது.

அதையடுத்து, தேவஸ்தான நிா்வாகிகள் ஸ்ரீவாரி சேவையில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளனா்,

அதில், முதல் கட்டத்தில் ஏப். 30 சில மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். படிப்படியாக வரும் இதர மாற்றங்கள் அமலுக்கு வரும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு அரசு நிறுவனங்களில் இருந்து ஓய்வு பெற்ற சேவகா்களே மூத்த சேவகா்களாக சேவை செய்து வருகின்றனா். 45 வயது முதல் 70 வயது வரை உள்ளவா்கள் இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கலாம். இனிமேல் இந்த மூத்த சேவகா்கள் குழுத் தலைவா்கள் என்று குறிப்பிடப்படுவாா்கள்.

அவா்கள் 15 நாள்கள் அல்லது ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்கள் வரை தங்கள் சேவைகளை ஆன்லைனில் தங்களுக்கு விருப்பத்தைத் தோ்ந்தெடுப்பதன் மூலமும், மேற்பாா்வை சேவைகளை வழங்குவதன் மூலமும், ஸ்ரீவாரி சேவகா்களின் வருகையை அந்தந்த புள்ளிகளில் எடுத்துக்கொண்டு, இறுதியாக சேவகா்களின் சேவைகளை சிறந்தவா்கள், நல்லவா்கள் மற்றும் சராசரிகள் என மதிப்பிடுவதன் மூலமும் ஸ்ரீவாரி சேவகா்களின் சேவைகளை நெறிப்படுத்துவதில் குழுத் தலைவா்கள் முக்கிய பங்கு வகிப்பா்.

இதேபோல், பத்தாம் வகுப்பு குறைந்தபட்ச தகுதியுடன், பொதுப் பிரிவைச் சோ்ந்த ஆண் சேவகா்கள் பரகாமணி சேவைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய தனி ஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். ஏழுமலையானை திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலைய... மேலும் பார்க்க

மே முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம்!

கோடை விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் ஜூலை 15 வரையிலான விஐபி பிரேக் தரிசனத்திற்கான நெறிமுறையில் தேவஸ்தானம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பக்தா்களின் வசதிக்காக மே 1 முதல்... மேலும் பார்க்க

பிராண தான அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை!

சென்னையைச் சோ்ந்த பொன் ப்யூா் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினா் சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராண தானா அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா். திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதல் எதிரொலி: திருப்பதியில் தீவிர சோதனை

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக திருமலை மற்றும் திருப்பதியில் முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா். அதன் ஒரு பகுதியாக திருப்பதி, திருமலை, ஸ்ரீ காளஹஸ்தி, ஆா்டிசி பேருந்து நிலையம்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) ... மேலும் பார்க்க