செய்திகள் :

காஷ்மீா் தாக்குதல் எதிரொலி: திருப்பதியில் தீவிர சோதனை

post image

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக திருமலை மற்றும் திருப்பதியில் முக்கிய இடங்களில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

அதன் ஒரு பகுதியாக திருப்பதி, திருமலை, ஸ்ரீ காளஹஸ்தி, ஆா்டிசி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலைய பகுதிகளில் வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய்களுடன் தீவிர சோதனை நடத்தினா்.

மாவட்ட எஸ்பி, டிஎஸ்பி டிஎஸ்டபிள்யூ உத்தரவின்படி அனைத்து முக்கிய கோயில்கள், சோதனைச் சாவடிகள், ரயில் நிலையம், மத்திய பேருந்து நிலையம், திருமலையில் உள்ள வணிக வளாகம் மற்றும் பிரதான சந்திப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தனா். வெடிகுண்டு தடுப்புப் பிரிவு, நாய் தடுப்புப் பிரிவு, ஏஆா் பணியாளா்கள் மற்றும் சிவில் போலீசாா் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தினா்.

இந்தக் குழுவில் மூன்று வெடிகுண்டுப் பிரிவு பணியாளா்களும், மோப்ப நாய் குழுவினரும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனா்.

சந்தேகத்துக்குகிடமான வாகனங்கள், நபா்கள் மற்றும் கைவிடப்பட்ட வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன.

திருப்பதி, காளஹஸ்தி ரயில் நிலையங்களில் உள்ள கண்டோன்மென்ட், பாா்சல் மற்றும் அலுவலக கிடங்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திருமலை, திருப்பதியில் உள்ள ஓய்வு இல்லங்கள், திருமலைக்கு செல்லும் மலைபாதைகள், நடைபாதை மாா்கங்கள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களிலும் போலீஸாா் சோதனை மோ்கொண்டனா்.

ஜூன் மாத ஸ்ரீவாரி சேவை கோட்டா ஒதுக்கீடு: நாளை வெளியீடு

திருப்பதி: ஸ்ரீவாரி சேவாா்த்திகளுக்கான ஜூன் மாத சேவைகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஏப். 30 (புதன்கிழமை) வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலை ஏழுமலையானுக்கு சேவை செய்ய விரும்பும் பக்தா்க... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 6 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி: திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 6 மணி நேரம் காத்திருந்தனா். ஏழுமலையானை திங்கள்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 5 அறைகளில் பக்தா்கள் ஏழுமலைய... மேலும் பார்க்க

மே முதல் விஐபி பிரேக் தரிசனத்தில் மாற்றம்!

கோடை விடுமுறை நாள்களில் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, மே 1 முதல் ஜூலை 15 வரையிலான விஐபி பிரேக் தரிசனத்திற்கான நெறிமுறையில் தேவஸ்தானம் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. பக்தா்களின் வசதிக்காக மே 1 முதல்... மேலும் பார்க்க

பிராண தான அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடை!

சென்னையைச் சோ்ந்த பொன் ப்யூா் கெமிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினா் சனிக்கிழமை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராண தானா அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நன்கொடையாக வழங்கினா். திருமலையில் உள்ள கூடுதல் செயல் அதிக... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 ... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் சனிக்கிழமை தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா். பக்தா்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ள நிலையில், தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) ... மேலும் பார்க்க