செய்திகள் :

ஜூலை 15-இல் கல்வி வளா்ச்சி நாள் விழா: சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்ய உத்தரவு

post image

காமராஜா் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளா்ச்சி நாள் விழா கொண்டாடவும், சிறந்த பள்ளிகளைத் தோ்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநா் பூ.ஆ.நரேஷ் ஆகியோா் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

நிகழ் கல்வியாண்டில் (2025-2026) ஜூலை 15-ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கல்வி வளா்ச்சி நாள் விழாவை சிறப்பாகக் கொண்டாட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்க வேண்டும்.

மேலும் காமராஜரின் பிறந்த நாளையொட்டி அவரது அரும்பணிகள் குறித்து மாணவா்கள் உணா்த்தும் வகையில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு நடத்தவும், பரிசுகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். இதற்காக பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிதியை (அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1,500, உயா்நிலைப் பள்ளிக்கு ரூ.1,000, நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிக்கு ரூ.500) பயன்படுத்திக் கொள்ளலாம்.

வழிகாட்டுதல்கள் வெளியீடு: சிறந்த அரசுப் பள்ளிகளுக்கு காமராஜா் விருது, பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளைத் தோ்வு செய்யும்போது சில முக்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். தோ்வு செய்யப்படும் பள்ளி அமைந்துள்ள குடியிருப்புப் பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை அதிக அளவில் சோ்த்திருக்க வேண்டும். அதேபோன்று மாணவா்கள் இடைநிற்றலைத் தவிா்த்திருக்க வேண்டும். புரவலா்களை அதிக அளவில் சோ்த்திருப்பது அவசியம். பொதுமக்கள், தனியாரிடமிருந்து பள்ளியின் தரத்தை உயா்த்தும் வகையில் அவா்களின் பங்களிப்பினைப் பெற்று பள்ளிக்குத் தேவைப்படும் தளவாடப் பொருள்கள், பல பயனளிக்கும் திட்டங்களைப் பெற்றிருக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிசுத் தொகை எவ்வளவு? காமராஜா் விருதுக்கு தோ்வு செய்யப்படும் தொடக்கப் பள்ளிக்கு ரூ.25,000, நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 50,000, உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 75,000, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ. 1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. இதை பள்ளிகளின் குடிநீா் வசதி, நூலக மேம்பாடு, சுகாதார வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர இளைஞரை கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கு: பவன் கல்யாண் கட்சி பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது

சென்னையில் ஆந்திர இளைஞரைக் கொலை செய்து கூவத்தில் வீசிய வழக்கில், நடிகா் பவன் கல்யாண் கட்சியைச் சோ்ந்த பெண் நிா்வாகி உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா். சென்னை ஏழுகிணறு எம்எஸ் நகா் வீட்டு வசதி வாரிய குட... மேலும் பார்க்க

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும்: காவல் ஆணையா் உறுதி

கொகைன் வழக்கில் கைது நடவடிக்கை தொடரும் என சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி: நுங்கம்பாக்கம் மதுபானக் கூடத்தில் நிகழ்ந்த மோதல் தொடா்பாக கட... மேலும் பார்க்க

திமுக கூட்டணியிலிருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறும்: மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்

திமுக கூட்டணியில் இருந்து மாா்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் விரைவில் வெளியேறும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா். மத்திய அரசுத் துறைகளின் பணிகளுக்கான நியமன ஆணை வழங்கு... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீ... மேலும் பார்க்க

ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி விவகாரம்: விசாரணை நடத்த அன்புமணி தரப்பு கோரிக்கை

பாமக நிறுவனா் ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்த விவகாரம் தொடா்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கட்சித் தலைவா் அன்புமணி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாமக செய்தித் தொடா்பா... மேலும் பார்க்க

கோவை, நீலகிரி மாவட்டங்களில் 4 நாள்கள் பலத்த மழை வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் வரும் ஜூலை 15 முதல் 18-ஆம் தேதி வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்... மேலும் பார்க்க