செய்திகள் :

"ஜெகதீப் தன்கரிடம் நட்டாவும், கிரணும் சொல்லவில்லை" - ஆய்வுக் குழுக் கூட்டம் குறித்து ஜெய்ராம் ரமேஷ்

post image

துணை குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (ஜூலை 21) அறிவித்திருந்தார்.

உடல்நலக் காரணங்களைக் கருத்தில் கொண்டு மருத்துவ பரிசோதனைக்காக ராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார்.

அவரின் திடீர் ராஜினாமா எதிர்க்கட்சிகளிடையே ஒருவித சந்தேகத்தையும் கிளப்பி இருக்கிறது.

ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர்

இந்நிலையில் தன்கரின் ராஜினாமா குறித்துப் பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "நேற்று பகல் 12.30-க்கு ஜெகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவையின் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது.

அவையின் ஆளுங்கட்சித் தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்.

மீண்டும் மாலை 4.30 கூட்டம் கூடியபோது, நட்டா, ரிஜிஜு அதில் பங்கேற்கவில்லை. மேலும், தாங்கள் பங்கேற்காதது குறித்த முறையான தகவல் தன்கரிடம் தெரிவிக்கப்படவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த தன்கர், அடுத்த நாள் பகல் 1 மணிக்குக் கூட்டத்தை ஒத்திவைத்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் திடீர் ராஜினாமா புரிந்துகொள்ள முடியாத அதிர்ச்சியாக உள்ளது.

ஜெகதீப் தன்கர்
ஜெகதீப் தன்கர்

நீதித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட இருந்தார்.

உடல் நிலையில் தன்கர் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இருப்பினும், இந்த முடிவை அவர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Jagdeep Dhankar ராஜினாமா: பகீர் பின்னணி! | OTP சர்ச்சை: சிக்கலில் DMK | Imperfect Show 22.7.2025

* Jagdeep Dhankar: குடியரசு துணை தலைவர் பதவியிலிருந்து ஜெகதீப் தன்கர் ராஜினாமா! - காரணம் என்ன? * “ராஜினாமா முடிவை தன்கர் மறுபரிசீலனை செய்ய வேண்டும்” -ஜெய்ராம் ரமேஷ்* நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?* உச... மேலும் பார்க்க

புதுச்சேரி: அரசுப் பணிகளில் கொல்லைப்புற பணி நியமனங்கள்! - சர்ச்சை வளையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை

நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத புதுச்சேரி அரசுபுதுச்சேரி கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2011 காலகட்டத்தில் அப்போதைய முதல்வர் ரங்கசாமியால், பல்நோக்கு ஊழியர்கள், தொழில்நு... மேலும் பார்க்க

"இதைக் கூறுபவர்கள் முதலில்..." - சொந்தக் கட்சித் தலைவர் பேச்சுக்கு சசி தரூர் எதிர்வினை!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக `ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதிலிருந்து நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களில் மோடி மற... மேலும் பார்க்க

மதிமுக-விலிருந்து கூண்டோடு வெளியேறும் ஆதரவாளர்கள்; மல்லை சத்யாவின் அடுத்த மூவ் என்ன?!

ம.தி.மு.க-வில் வைகோவுக்கு அடுத்த இடத்தில் மல்லை சத்யா இருந்தார். கொரோனா நேரத்தில் வைகோவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அந்த நேரத்தில் திடீரென துரை வைகோ கட்சிக்குள் என்ட்ரியானர். பிறகு ம.தி.மு.க-விலிரு... மேலும் பார்க்க