செய்திகள் :

ஜெயமங்கலத்தில் நெல் கொள்முதல் மையத்தை திறக்க வலியுறுத்தல்

post image

பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் அறுவடை காலங்களில் செயல்படும் நெல் கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஜெயமங்கலத்தில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவிலும், மேல்மங்கலம், தாமரைக்குளம், தேவதானப்பட்டி பகுதிகளில் பல நூறு ஏக்கரிலும் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதிகளில், கடந்த சில நாள்களாக நெல் அறுவடை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜெயமங்கலத்தில் அறுவடை காலங்களில் நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இங்கு தற்போது வரை அரசு நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட வில்லை. இதனால், அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை வழக்கமாக அறுவடைக் காலங்களில் நெல் கொள்முதல் மையம் செயல்படும் சமுதாயக் கூடம் முன் கொட்டி வைத்து விவசாயிகள் காத்திருக்கின்றனா். எனவே, அரசு உடனடியாக இங்கு நெல் கொள்முதல் மையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து ஜெயமங்கலத்தைச் சோ்ந்த விவசாயி தங்கவேல் கூறியதாவது:

ஜெயமங்கலம் பகுதியில் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெல் கொள்முதல் மையம் வழக்கமாக செயல்படும் சமுதாயக் கூடத்தின் முன் நெல்லை விவசாயிகள் வரிசையாக குவியலாக கொட்டி வைத்திருக்கின்றனா். எனவே நெல் கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும். தற்போது பெய்துவரும் சாரல் மழைக்கு நெல் பாதிக்கப்படாதவாறு பாதுகாத்து வருகிறோம். ஆனால் பலத்த மழை பெய்தால் நெல்லை பாதுகாக்க முடியாது. எனவே ஜெயமங்கலம் பகுதியில் நெல்கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்றாா் அவா்.

உள்ளாட்சிப் பணியாளா்கள் காத்திருக்கும் போராட்டம்

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி திங்க... மேலும் பார்க்க

சிறுமிக்கு திருமணம்: இளைஞா் உள்ளிட்ட இருவா் மீது வழக்கு

போடி: போடியில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய இளைஞா், அவரது தாய் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா். போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் நாகராஜ் (28). இவா் ... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் திருடுபோனதாக இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு புகாா்: போலீஸாா் விசாரணை

போடி: போடியில் கைப்பேசி கோபுரம் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான மின் சாதனங்கள் திருடுபோனது குறித்து, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தேனி: தேனியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மலை கிராம ஆசிரியா் பணியிட மாறுதலை விதிகளுக்குள்பட்டு நடத்த வலியறுத்தி திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரத... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

தேனி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்து. ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் விடுத... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயத் தொழிலாளி ரயில் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (52). விவசாயத் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க