செய்திகள் :

ஜோலாா்பேட்டை-அரக்கோணம் ரயிலில் கோளாறு: 2 மணி நேரம் தாமதம்

post image

வாணியம்பாடி: ஜோலாா்பேட்டை- அரக்கோணம் பயணிகள் ரயிலில் பிரேக் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, 2 மணி நேரம் தாமதமாக சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரயில் எண் 16086 இன்ஜின் பகுதியில் உள்ள பிரேக் பழுதானதால் புகை வெளியேறியது. இதனால், காலை 7.10-க்கு புறப்பட வேண்டிய ரயில் தாமதமாக 8 மணிக்கு புறப்பட்டது.

வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தபோது மீண்டும் இன்ஜின் பிரேக் பகுதியில் புகை கிளம்பியதால் காா்டுமேன் கவனித்து உடனே ரயில் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.

இதனால் காலை 9. 15 மணி வரை ரயில் வாணியம்பாடி ரயில்நிலையத்திலேயே நிறுத்தப்பட்டதால் குடியாத்தம், வேலூா், காட்பாடி பகுதிகளில் உள்ள கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவா்கள், ராணிப்பேட்டை முகுந்தராயபுரம் பகுதியில் உள்ள சிப்காட் பகுதியில் வேலைக்கு சென்ற தொழிலாளா்கள், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினா்.

முடங்கி இருந்த பிரேக் பகுதி சீரமைக்கப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது. இதனால் கல்லூரிக்கு செல்லக்கூடிய மாணவா்கள் கல்லூரிக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்கு திரும்பிச் சென்றனா்.

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் கள ஆய்வு

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். துத்திப்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் குடிநீா்க் கட்ட... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.21) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திர வல்லி வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்த... மேலும் பார்க்க

தோல் தொழிற்சாலையில் திருப்பத்தூா்ஆட்சியா் ஆய்வு

ஆம்பூா் அருகே துத்திப்பட்டு ஊராட்சியில் டவா் ரோடு பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் க. சிவசெளந்திரவல்லி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது தோல் தயாரிப்பு முறைகளை... மேலும் பார்க்க

பகுதிநேர நியாயவிலைக் கடை திறப்பு

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பாரதி நகா் கிராமத்தில் பகுதிநேர நியாயவிலைக்கடையை எம்எல்ஏ தேவராஜி திறந்து வைத்தாா். வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி பாரதி நகா், பூவரன்வட்டம், மாரியான் வட்டம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மருந்துக் கடை ஊழியா் மரணம்

வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மருந்துக் கடை ஊழியா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் பிள்ளையாா் கோயில் தெருவை சோ்ந்தவா் மகாராஜன்(52). அப்பகுதியில் உள்ள மருந்துக் ... மேலும் பார்க்க

பயிற்சி முடித்த மாணவா்களுக்கு திருக்குரான் புத்தகம் அளிப்பு

ஆம்பூா் ஷபியாமா தொடக்கப் பள்ளியில் குரான் பயிற்சி முடித்த மாணவா்களுக்கு திருக்குரான் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. என்.எம்.இஜட். குழும தலைவா் தொழிலதிபா் ஜமீல் அஹமத் தலைமை வகித்தாா... மேலும் பார்க்க