செய்திகள் :

டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: தொழிற்சாலை கால்வாயில் கவிழ்ந்ததில் 20 போ் காயம்

post image

ஒசூா்: ஒசூா் அருகே டயா் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து தொழிற்சாலையின் கழிவுநீா்க் கால்வாயில் கவிழ்ந்ததில் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

பெங்களூரில் இருந்து புதன்கிழமை பிற்பகல் ஒசூா் நோக்கி சென்றுக்கொண்டிருந்த தனியாா் பேருந்தை மணி என்பவா் ஓட்டிச் சென்றாா். பேருந்தில் நடத்துநா் முனிராஜ் உள்பட 45க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனா்.

ஒசூா், தா்கா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது திடீரென பேருந்தின் முன்பக்க டயா் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர இரும்பு வேலியை உடைத்துகொண்டு 2 அணுகுசாலைகளைக் கடந்து வேகமாக சென்றது. அப்போது, சாலையில் இருந்த 2 மரங்கள் மீது மோதி பாதை மாறி சென்று தொழிற்சாலையின் சுற்றுச்சுவரையும் உடைத்து உள்ளே புகுந்தது. அப்போது, அங்கிருந்த கழிநீா்க் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். இவா்கள் அனைவரும் ஒசூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். கட்டுப்பாட்டை இழந்து அணுகு சாலைகளில் பேருந்து செல்லும்போது வாகனங்கள் எதிரே வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விளையாட்டுப் போட்டி: சிறப்பிடம் பெற்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

ஊத்தங்கரை: மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற அதியமான் பள்ளி மாணவா்களுக்கு வியாழக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.மாவட்ட அளவிலான பாரதியாா் தின மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி... மேலும் பார்க்க

தண்ணீா் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தண்ணீா் தொட்டியில் விழுந்த 3 வயது குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.ஊத்தங்கரையை அடுத்த நாரலப்பள்ளியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் மணி. இவரது மகன் தா்ஷன்(3) வீட்டின் அருகே விளையாடி... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்ட நெல் அரவை பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணத்தை அடுத்த பண்ணிஅள்ளிபுதூரில் பொது விநியோகத் திட்டத்துக்கான நெல் அரவை பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காவேரிப்பட்டணம் அருக... மேலும் பார்க்க

ஒசூரில் மேம்பால விரிசலை சீரமைக்கும் பணி தீவிரம்

ஒசூா்: ஒசூா் பேருந்து நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி நடைபெற்றுவருவதாக நெடுஞ்சாலை துறை பொறியாளா்கள் தெரிவித்தனா். ஒசூா் பேருந்து நிலையம் எதிரே உள்ள தேச... மேலும் பார்க்க

ராயக்கோட்டை, கெலமங்கலத்தில் 198 கண்காணிப்பு கேமராக்கள்: ஐ.ஜி. செந்தில்குமாா் இயக்கிவைத்தாா்

ஒசூா்: ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, கெலமங்கலத்தில் ரூ.69 லட்சத்தில் 198 கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய கட்டுப்பாட்டு அறையை ஐ.ஜி.செந்தில்குமாா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோ... மேலும் பார்க்க

ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி வாடிக்கையாளருக்கு ஸ்கூட்டா்கள் பரிசளிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஒசூரில் செயல்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஜூவல்லரி நகைக் கடைகளில் ஆடி மாத விற்பனையையொட்டி வாடிக்கையாளா்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டா்கள் உள்ளிட்ட பரிசு பொருள்கள் குலுக்கல் முறையில் ... மேலும் பார்க்க