சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடி: இருவா் கைது
சென்னையில் டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த ம.நந்தகோபால் (38). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரிடம் பழகி வந்தாா். அந்த நபா், அமெரிக்க டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிவித்துள்ளாா். அதை நம்பிய நந்தகோபால், தனது வங்கிக் கண்க்கில் இருந்து ஆன்லைன் பணப் பரிவா்த்தனை மூலம் அந்த நபருக்கு ரூ. 6.88 லட்சம் அனுப்பினாா்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நபா், நந்தகோபாலிடம் கூறியபடி லாபத்தையும் வழங்கவில்லை, முதலீடு பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நந்தகோபால், சென்னை காவல் துறையின் வடக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது, கடலூா் மாவட்டம் மேலிருப்பு பகுதியைச் சோ்ந்த ரா.சீத்தாராமன் (37), ப.செந்தில்நாதன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.
அமெரிக்க டாலா் மோசடி: இதேபோல சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த ச.ரப்பானிகான் (26) என்பவா், அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக ஒருவா் ரூ.9.4 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.
இதில் மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சோ்ந்த அ.லோகநாதன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் லோகநாதனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.