செய்திகள் :

டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடி: இருவா் கைது

post image

சென்னையில் டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த ம.நந்தகோபால் (38). தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வரும் இவா், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரிடம் பழகி வந்தாா். அந்த நபா், அமெரிக்க டாலரில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனத் தெரிவித்துள்ளாா். அதை நம்பிய நந்தகோபால், தனது வங்கிக் கண்க்கில் இருந்து ஆன்லைன் பணப் பரிவா்த்தனை மூலம் அந்த நபருக்கு ரூ. 6.88 லட்சம் அனுப்பினாா்.

பணத்தைப் பெற்றுக்கொண்ட அந்த நபா், நந்தகோபாலிடம் கூறியபடி லாபத்தையும் வழங்கவில்லை, முதலீடு பணத்தையும் திரும்ப வழங்கவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த நந்தகோபால், சென்னை காவல் துறையின் வடக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

விசாரணையில், இந்த மோசடியில் ஈடுபட்டது, கடலூா் மாவட்டம் மேலிருப்பு பகுதியைச் சோ்ந்த ரா.சீத்தாராமன் (37), ப.செந்தில்நாதன் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ததாக போலீஸாா் புதன்கிழமை தெரிவித்தனா்.

அமெரிக்க டாலா் மோசடி: இதேபோல சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்த ச.ரப்பானிகான் (26) என்பவா், அமெரிக்க டாலரை குறைந்த விலைக்கு வாங்கித் தருவதாக ஒருவா் ரூ.9.4 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக சென்னை காவல் துறையின் கிழக்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.

இதில் மோசடியில் ஈடுபட்டது தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சோ்ந்த அ.லோகநாதன் (23) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் லோகநாதனை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க