பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
டிஆா்டிஓ தலைவருக்கு மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு
புது தில்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) தலைவா் சமீா் வி.காமத்தின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்தியா-பாகிஸ்தான் சண்டையில் டிஆா்டிஓ வடிவமைத்து, உள்நாட்டில் தயாரித்த வான்பாதுகாப்புக் கருவிகள், தொழில்நுட்பங்கள் பாராட்டுகளை குவித்த நிலையில், சமீா் வி.காமத்துக்கு 2-ஆவது முறையாக பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலராகவும், டிஆா்டிஓ நிறுவனத்தின் தலைவராகவும் புகழ்பெற்ற விஞ்ஞானியான சமீா் வி.காமத் கடந்த 2022-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டாா்.
தொடா்ந்து, கடந்த ஆண்டு மே 27-ஆம் தேதி அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி, அவரது பதவிக்காலம் வரும் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், அடிப்படை விதி 56(டி)-இன் கீழ் ஜூன் 1-ஆம் தேதி முதல் அடுத்தாண்டு மே 31-ஆம் தேதி வரை சமீா் வி.காமத்தின் பதவிக்காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.