செய்திகள் :

டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், தந்தையால் சுட்டுக் கொலை! காரணம் என்ன?

post image

ஹரியாணா மாநிலம், குருகிராமைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ், அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், காரணம் குறித்து காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடியிருந்தார். இவர் குடும்பத்தினருடன் குருகிராமில் உள்ள செக்டார் 57- பகுதியில் வசித்துவந்த நிலையில், வியாழக்கிழமை, அவரது தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

49 வயதாகும் தீபக் யாதவ், தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் ராதிகாவை சுட்டதில், மூன்று குண்டுகள் அவரது உடலில் பாய்ந்து, அவர் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்.

இது குறித்து விசாரணை நடத்தி, தீபக் யாதவை கைது செய்த காவல்துறையினர், ராதிகா யாதவ், சொந்தமாக டென்னிஸ் பயிற்சி மையம் நடத்தி வந்துள்ளார். இது தந்தைக்குப் பிடிக்கவில்லை. இது தொடர்பாகவும், ராதிகா, இன்ஸ்டாவில் ரீல்ஸ் எடுத்துப் போடுவது தொடர்பாகவும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதத்தின்போதுதான், தீபக், தனது கைத்துப்பாக்கியை எடுத்துவந்து மகளை சுட்டுக் கொலை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. சம்பவம் நடந்தபோது, ராதிகாவின் தாய் மற்றும் அண்ணன் இருவரும் வீட்டில்தான் இருந்துள்ளனர். அவர்கள்தான் ராதிகாவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

டென்னிஸ் விளையாட்டில் வளரும் நட்சத்திரமாக, ராதிகா இருந்துள்ளார். டென்னிஸ் தரவரிசையில் 113வது இடத்தைப் பிடித்திருந்தார். ஹரியாணா மாநில அளவில், இரட்டையர் அணயில் நான்காவது இடத்தில் இருந்துள்ளார்.

Tennis player Radhika Yadav was shot dead by her father, and the reason behind it

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க