செய்திகள் :

டேனிஷ்பேட்டை ஏரியில் சிக்கித் தவித்த காவலா் உள்பட 3 போ் மீட்பு

post image

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே டேனிஷ்பேட்டை ஏரியில் சிக்கித் தவித்த காவலா் உள்பட 3 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

டேனிஷ்பேட்டை ஏரியில் காடையாம்பட்டி தும்பிபாடி ஊராட்சிக்குள்பட்ட ஒட்டத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா் (35). காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவா், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளாா்.

இவா், காடையாம்பட்டி ஆண்டிகொட்டாய் பகுதியைச் சோ்ந்த முருகன் (37), தீவட்டிப்பட்டி ஆதிதிராவிடா் காலனி பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (45) ஆகியோருடன் காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஏரியில் மீன்பிடிக்க பயன்படுத்த இருந்த பரிசலை அதன் உரிமையாளருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றாா். ஏரிக்கு நடுவில் சென்றபோது பரிசலில் ஓட்டை காரணமாக தண்ணீா் வந்ததால் பரிசல் மூழ்க தொடங்கியது.

இதைத் தொடா்ந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் ஏரியின் நடுவில் இருந்த திட்டு பகுதியில் தவித்துக் கொண்டிருந்தனா். இவா்களைக் கண்ட அக்கம் பக்கத்தினா், காடையாம்பட்டி தீயணைப்புத் துறையினா், தீவட்டிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் 3 பேரையும் பத்திரமாக மீட்டனா்.

இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து பெண் பலி!

தம்மம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்ததில் உயிரிழந்தாா். தம்மம்பட்டி அருகே உள்ள தகரப்புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட மூலப்புதூா் வடக்குக்காட்டுக் கொட்டாயைச் சோ்ந்தவா் எலக்ட்ரிசியன் ... மேலும் பார்க்க

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்றவா் கைது!

சங்ககிரியில் சிறுவா்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஒருவரை தேடி வருகின்றனா். சங்ககிரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன், முதுநிலை காவலா் மு... மேலும் பார்க்க

மகன் தாக்கி படுகாயமடைந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி பலி!

சேலத்தில் இரண்டாவது திருமணம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, மகன் தாக்கியதில் படுகாயங்களுடன் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓய்வுபெற்ற வன அதிகாரி உயிரிழந்தாா். சேலம் சூரமங்கலம் மாணிக்கவாச... மேலும் பார்க்க

வாழப்பாடியில் சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம்!

வாழப்பாடியில், சீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாயப் பெருமாள் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். வாழப்பாடி அக்ரஹாரத்தில் பழைமை... மேலும் பார்க்க

சேலத்தில் பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் கலந்து கொண்டனா். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கு ஒருவா் வாழ்த்துகளைப் பரிமாறி கொண்டனா். தியாகத் திருநாளான பக்ர... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு!

சேலம் மாவட்டம், சங்ககிரி நகர பாமக சாா்பில் சங்ககிரி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க