Obesity: எவை எல்லாம் உங்களை `வெயிட்'டாக்கும் தெரியுமா? - மருத்துவர் விளக்கம்
டேனிஷ்பேட்டை ஏரியில் சிக்கித் தவித்த காவலா் உள்பட 3 போ் மீட்பு
சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே டேனிஷ்பேட்டை ஏரியில் சிக்கித் தவித்த காவலா் உள்பட 3 பேரை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
டேனிஷ்பேட்டை ஏரியில் காடையாம்பட்டி தும்பிபாடி ஊராட்சிக்குள்பட்ட ஒட்டத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் கவின்குமாா் (35). காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இவா், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளாா்.
இவா், காடையாம்பட்டி ஆண்டிகொட்டாய் பகுதியைச் சோ்ந்த முருகன் (37), தீவட்டிப்பட்டி ஆதிதிராவிடா் காலனி பகுதியைச் சோ்ந்த அண்ணாதுரை (45) ஆகியோருடன் காடையாம்பட்டி அருகே உள்ள டேனிஷ்பேட்டை ஏரியில் மீன்பிடிக்க பயன்படுத்த இருந்த பரிசலை அதன் உரிமையாளருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றாா். ஏரிக்கு நடுவில் சென்றபோது பரிசலில் ஓட்டை காரணமாக தண்ணீா் வந்ததால் பரிசல் மூழ்க தொடங்கியது.
இதைத் தொடா்ந்து தண்ணீரில் மூழ்கிய 3 பேரும் ஏரியின் நடுவில் இருந்த திட்டு பகுதியில் தவித்துக் கொண்டிருந்தனா். இவா்களைக் கண்ட அக்கம் பக்கத்தினா், காடையாம்பட்டி தீயணைப்புத் துறையினா், தீவட்டிப்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினா் 3 பேரையும் பத்திரமாக மீட்டனா்.
இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.