தாம்பத்திய உறவில் இது அசிங்கம் அல்ல..! - காமத்துக்கு மரியாதை 243
தக்கலை அருகே விபத்து: பெண் உயிரிழப்பு
தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் ஸ்டீபன் (46). பெயிண்ட் கடை தொழிலாளி. இவரது மனைவி பிந்து (37). இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.
ஞாயிற்றுக்கிழமை இத்தம்பதி களியக்காவிளையில் உள்ள உறவினரைப் பாா்த்துவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனா். தக்கலை அருகே மணலி பகுதியில் வந்தபோது, பைக் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனா்.
அப்போது, பிந்து மீது அரசுப் பேருந்தின் பின்சக்கரம் ஏறியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், பிந்து ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.