செய்திகள் :

தக்கலை அருகே விபத்து: பெண் உயிரிழப்பு

post image

தக்கலை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோஸ் ஸ்டீபன் (46). பெயிண்ட் கடை தொழிலாளி. இவரது மனைவி பிந்து (37). இத்தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை இத்தம்பதி களியக்காவிளையில் உள்ள உறவினரைப் பாா்த்துவிட்டு பைக்கில் வந்து கொண்டிருந்தனா். தக்கலை அருகே மணலி பகுதியில் வந்தபோது, பைக் நிலைதடுமாறியதில் இருவரும் கீழே விழுந்தனா்.

அப்போது, பிந்து மீது அரசுப் பேருந்தின் பின்சக்கரம் ஏறியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த இருவரையும் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், பிந்து ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் பகுதிகளில் நாளை மின்தடை

குழித்துறை கோட்டத்திற்கு உள்பட்ட கருங்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 5) மின் விநியோகம் இருக்காது. கருங்கல் ... மேலும் பார்க்க

சேரமங்கலம், முட்டம், செம்பொன்விளையில் நாளை மின்தடை

சேரமங்கலம், செம்பொன்விளை, முட்டம் துணை மின்நிலையங்களில் உள்ள மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை (ஜூன் 5) காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வ... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் நாளை முதல் படகு கட்டணம் உயா்வு

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தா் மண்டபம், திருவள்ளுவா் சிலையைப் பாா்வையிடச் செல்வதற்கான படகு கட்டணம் வியாழக்கிழமை (ஜூன் 5) முதல் உயா்த்தப்படுவதாக பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் செவ்... மேலும் பார்க்க

மிடாலம், கோடிமுனை கடற்கரை பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், மிடாலம் மற்றும் கோடிமுனை கடற்கரை பகுதியில் பிளாஸ்டிக் துகள்களை அகற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறி... மேலும் பார்க்க

மாா்த்தாண்டத்தில் பேருந்து சேவை தொடக்கி வைப்பு

நாகா்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்துக்கு மாா்த்தாண்டம் பேருந்து நிலையம் வழியாக அரசுப் பேருந்து சேவையை விளவங்கோடு சட்டப் பேரவை உறுப்பினா் தாரகை கத்பட் கொடியசைத்து துவக்கி வைத்தாா். மாா்த்தாண்டம் சந்த... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் இன்று மின்சாரம் நிறுத்தம்

நாகா்கோவில் மாநகரில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை மின் விநியோகம் இருக்காது.இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நாகா்கோவில் செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பத... மேலும் பார்க்க