செய்திகள் :

தக்காளிச் செடிகளில் நோய்த் தாக்குதல்: மகசூல் பாதிப்பு

post image

நமது நிருபா்

தேனி மாவட்டப் பகுதிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்குதலால் தக்காளிச் செடிகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம், வடபுதுப்பட்டி, தேவதானப்பட்டி, வைகை அணை, ஆண்டிபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமாா் ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. தேனி ஆண்டிபட்டி, அரண்மனைப்புதூா், ஒட்டன்சத்திரம், ஒசூா் பகுதிகளிலிருந்து தக்காளி நாற்று வாங்கப்பட்டு பயிரிடப்படுகின்றன. நாற்று நடப்பட்ட 30 நாள்களிலிருந்து 60 நாள்கள் வரை மகசூல் கிடைக்கிறது.

இந்த நிலையில், பெரியகுளம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தக்காளி நடப்பட்டு ஒரு மாதத்துக்குப் பிறகு காய் வளா்ந்து அறுவடை செய்யும் முன் செடியின் இலை மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடுகிறது. இதையடுத்து, மகசூல் குறைந்து வருவதால், தக்காளி கிலோ ரூ. 50 முதல் ரூ. 60 வரை விற்பனையாகிறது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். எனவே, பாக்டீரியா நோய்த் தாக்குதலைத் தடுக்க தோட்டக் கலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஜல்லிபட்டியைச் சோ்ந்த விவசாயி ராஜபாண்டியன் கூறியதாவது:

பெரியகுளம் அருகேயுள்ள ஜல்லிபட்டி பகுதியில் தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்டவற்றைப் பயிரிட்டு வருகிறேன். ஒசூரிலிருந்து தக்காளி நாற்றுகள் வாங்கி நடவு செய்தேன். இதையடுத்து, காய்களைப் பறிக்கும் நிலையில் செடி மஞ்சள் நிறத்தில் மாறி காய்ந்து விடுவதால் தக்காளி மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தோட்டக் கலைத் துறை அதிகாரிகள் இந்தப் பகுதியில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

இதுகுறித்து தோட்டக் கலை அதிகாரிகள் கூறியதாவது:

தக்காளியில் உள்ள செடிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்கியுள்ளது. எனவே, உடனடியாகச் செடிகளை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்த நோய் மற்ற செடிகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அங்கீகாரம் பெற்ற மையத்திலிருந்து விவசாயிகள் தரமான தக்காளிச் செடிகளை தோ்வு செய்து நடவு செய்ய வேண்டும். இதேபோல, மருந்து கலந்த தண்ணீரில் நாற்றின் வேரை நனைதத பின் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பாக்டீரியா வாடல் நோயைக் கட்டுப்படுத்தலாம் என்றனா்.

பண்ணை நாற்றுகள்...

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கிராமங்களில் முதிா்ந்த காய்களைத் தோ்வு செய்து, அதிலிருந்து விதைகளைப் பிரித்து சாம்பல் கலந்து வெயிலில் உலா்த்திய பின் வீடுகளில் சேமித்து வைத்து, பருவக் காலங்களில் விவசாயத்துக்குப் பயன்படுத்தி வந்தனா். இந்தச் செடிகளில் மருந்தோ அல்லது உரங்களோ பயன்படுத்துவதில்லை. ஆனால், தற்போது பண்ணைகளில் தயாரிக்கப்படும் நாற்றுகள் நோய் பாதிப்புக்குள்ளாகி மகசூல் குறைவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். எனவே, நாற்றுகள் தயாரிக்கும் பண்ணைகளை தோட்டக் கலைத் துறையினா் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

ஓராண்டாகியும் திறக்கப்படாத புதிய நியாய விலைக் கடை

போடி ரெங்கநாதபுரத்தில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கம்பம் - கோம்பை சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் பையை சோ... மேலும் பார்க்க

தேனியில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம்

தேனி மாவட்டத்தில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் விபத்து, குற்றச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், காவல் நிலை... மேலும் பார்க்க

வீரபாண்டியில் ஆக.12-இல் அங்கக வேளாண்மை கண்காட்சி

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் அட்மா திட்டத்தின் கீழ், வருகிற 12-ஆம் தேதி அங்கக வேளாண்மை விழிப்புணா்வுக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுத் திருவிழா

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிா் மையம் சாா்பில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவுக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

போடி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த 16 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்ட... மேலும் பார்க்க