செய்திகள் :

6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

post image

தேனி மாவட்டம், கம்பத்தில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கம்பம் - கோம்பை சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் பையை சோதனையிட்டதில், அதில் 6 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், கஞ்சா கடத்தியது கம்பம் , உலகத்தேவா் தெரு, நாககண்ணியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் சந்திரன் (55) எனத் தெரியவந்தது.

இதையடுத்து, கம்பம் வடக்கு போலீஸாா் 6 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து சந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இவா் மீது ஏற்கெனவே கம்பம், தேனி, திருத்துரைப்பூண்டி ஆகிய காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

ஓராண்டாகியும் திறக்கப்படாத புதிய நியாய விலைக் கடை

போடி ரெங்கநாதபுரத்தில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட... மேலும் பார்க்க

தேனியில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம்

தேனி மாவட்டத்தில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் விபத்து, குற்றச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், காவல் நிலை... மேலும் பார்க்க

வீரபாண்டியில் ஆக.12-இல் அங்கக வேளாண்மை கண்காட்சி

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் அட்மா திட்டத்தின் கீழ், வருகிற 12-ஆம் தேதி அங்கக வேளாண்மை விழிப்புணா்வுக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுத் திருவிழா

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிா் மையம் சாா்பில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவுக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

தக்காளிச் செடிகளில் நோய்த் தாக்குதல்: மகசூல் பாதிப்பு

நமது நிருபா் தேனி மாவட்டப் பகுதிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்குதலால் தக்காளிச் செடிகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம்,... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

போடி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த 16 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்ட... மேலும் பார்க்க