செய்திகள் :

ஓராண்டாகியும் திறக்கப்படாத புதிய நியாய விலைக் கடை

post image

போடி ரெங்கநாதபுரத்தில் புதிதாக நியாய விலைக் கட்டடம் கட்டி ஓராண்டாகியும் திறக்கப்படாததால் பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குள்பட்ட ரெங்கநாதபுரம் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. 3, 7, 8, 9 ஆகிய வாா்டுகளைச் சோ்ந்த 1,500-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு இந்த நியாய விலைக் கடையில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நியாய விலைக் கட்டடம் சிறிதாத இருப்பதால் அதிகளவில் பொருள்கள் வைக்க இயலாமல் செயல்பட்டு வந்தது. இதையடுத்து, பொதுமக்கள் கோரிக்கையின்பேரில் சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து புதிய நியாய விலைக் கடைக் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓராண்டுக்கு முன் ரூ. 13 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய நியாய விலைக் கட்டடம் தற்போது வரை திறக்கப்படவில்லை.

இதுகுறித்து போடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகி வீரராஜ் கூறுகையில், புதிய நியாய விலைக் கட்டடம் பயன்படுத்தப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பொருள்களை வாங்க இரண்டு, மூன்று முறை வரவேண்டியுள்ளது. அரசுக்கும் வாடகையிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையில், புதிய நியாய விலைக் கட்டடத்தை உடனடியாகத் திறக்க கூட்டுறவுத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

6 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 6 கிலோ கஞ்சா கடத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கம்பம் - கோம்பை சாலையில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரின் பையை சோ... மேலும் பார்க்க

தேனியில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம்

தேனி மாவட்டத்தில் காவல் துறை இருசக்கர வாகன ரோந்துப் பிரிவு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் விபத்து, குற்றச் சம்பவங்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஆகியவற்றைக் கண்காணிக்கவும், காவல் நிலை... மேலும் பார்க்க

வீரபாண்டியில் ஆக.12-இல் அங்கக வேளாண்மை கண்காட்சி

தேனி மாவட்டம், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் அட்மா திட்டத்தின் கீழ், வருகிற 12-ஆம் தேதி அங்கக வேளாண்மை விழிப்புணா்வுக் கண்காட்சி, கருத்தரங்கு நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட... மேலும் பார்க்க

கல்லூரியில் உணவுத் திருவிழா

தேனி மாவட்டம், போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் உணவுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. மகளிா் மையம் சாா்பில் நடைபெற்ற இந்த உணவுத் திருவிழாவுக்கு கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்த... மேலும் பார்க்க

தக்காளிச் செடிகளில் நோய்த் தாக்குதல்: மகசூல் பாதிப்பு

நமது நிருபா் தேனி மாவட்டப் பகுதிகளில் பாக்டீரியா வாடல் நோய்த் தாக்குதலால் தக்காளிச் செடிகள் மஞ்சள் நிறமாகி காய்ந்து விடுவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். தேனி மாவட்டம்,... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு

போடி அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்த 16 வயது சிறுமி 10-ஆம் வகுப்பு படித்துவிட்டு வீட்ட... மேலும் பார்க்க